மே 2028

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
28293031
இன்றுக்கு

வாசகங்கள்

9 மே, 2028

Easter Weekday

அன்றைய திருப்பலி
First Reading

திருத்தூதர் பணிகள் 11: 19-26

19ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை. 20அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். 21ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். 22இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பிவைத்தார்கள். 23அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும், உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். 24அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார். 25பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; 26அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஒராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 87: 1b-3, 4-5, 6-7

1⁽நகரின் அடித்தளம்␢ திருமலைகளின்மீது␢ அமைந்துள்ளது.⁾ 2⁽யாக்கோபின் உறைவிடங்கள்␢ அனைத்தையும்விட␢ ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை␢ விரும்புகின்றார்.⁾ 3⁽கடவுளின் நகரே! உன்னைப்பற்றி␢ மேன்மையானவை␢ பேசப்படுகின்றன. (சேலா)⁾ 4⁽எகிப்தையும் பாபிலோனையும்␢ என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்;␢ பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா␢ நாட்டினரைக் குறித்து,␢ ‛இவர்கள் இங்கேயே␢ பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.⁾ 5⁽‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்;␢ உன்னதர்தாமே அதை␢ நிலைநாட்டியுள்ளார்!’ என்று␢ சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.⁾ 6⁽மக்களினங்களின் பெயர்களைப்␢ பதிவு செய்யும்போது,␢ ‛இவர் இங்கேதான் பிறந்தார்’ என␢ ஆண்டவர் எழுதுவார். (சேலா)⁾ 7⁽ஆடல் வல்லாருடன்␢ பாடுவோரும் சேர்ந்து␢ ‛எங்கள் நலன்களின் ஊற்று␢ உன்னிடமே உள்ளது;␢ எல்லாரின் உறைவிடமும்␢ உன்னிடமே உள்ளது’ என்பர்.⁾
Alleluia

யோவான் 10: 27

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel

யோவான் 10: 22-30

22எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். 23கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருந்தார். 24யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள். 25இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. 26ஆனால், நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல. 27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. 28நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். 29அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.* 30நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.⒫