மார்ச் 2028

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

5 மார்ச், 2028

First Sunday of Lent

அன்றைய திருப்பலி
First Reading

இணைச் சட்டம் 26: 4-10

4அப்போது, குரு அந்தக் கூடையை உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். 5நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: ‘நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அந்நியராய் இருந்தார். ஆனால், அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். 6எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். 7அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். 8தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். 9அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார். 10எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்’ என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 91: 1-2, 10-11, 12-13, 14-15

1⁽உன்னதரின் பாதுகாப்பில்␢ வாழ்பவர், எல்லாம் வல்லவரின்␢ நிழலில் தங்கியிருப்பவர்.⁾ 2⁽ஆண்டவரை நோக்கி,␢ “நீரே என் புகலிடம்; என் அரண்;␢ நான் நம்பியிருக்கும் இறைவன்”␢ என்று உரைப்பார்.⁾ 10⁽ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது;␢ வாதை உம் கூடாரத்தை நெருங்காது.⁾ 11⁽நீர் செல்லும் இடமெல்லாம்␢ உம்மைக் காக்கும்படி,␢ தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.⁾ 12⁽உம் கால் கல்லின்மேல் மோதாதபடி,␢ அவர்கள் தங்கள் கைகளில்␢ உம்மைத் தாங்கிக்கொள்வர்.⁾ 13⁽சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும்␢ நீர் நடந்து செல்வீர்;␢ இளஞ்சிங்கத்தின்மீதும்␢ விரியன்பாம்பின்மீதும்␢ நீர் மிதித்துச் செல்வீர்.⁾ 14⁽‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால்,␢ அவர்களை விடுவிப்பேன்;␢ அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால்,␢ அவர்களைப் பாதுகாப்பேன்;⁾ 15⁽அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது,␢ அவர்களுக்குப் பதிலளிப்பேன்;␢ அவர்களது துன்பத்தில்␢ அவர்களோடு இருப்பேன்;␢ அவர்களைத் தப்புவித்து␢ அவர்களைப் பெருமைப்படுத்துவேன்;⁾
Second Reading

உரோமையர் 10: 8-13

8அதில் சொல்லியிருப்பது இதுவே: ⁽“வார்த்தை உனக்கு␢ மிக அருகில் உள்ளது;␢ உன் வாயில்,␢ உன் இதயத்தில் உள்ளது.”⁾ இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும்.⒫ 9ஏனெனில், ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். 10இவ்வாறு, உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர்.⒫ 11ஏனெனில், ⁽“அவர் மீது நம்பிக்கை கொண்டோர்␢ வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்” ⁾ என்பது மறை நூல் கூற்று. 12இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். 13⁽“ஆண்டவரின் திருப்பெயரை␢ அறிக்கையிட்டு மன்றாடுகிறவர்.␢ எவரும் மீட்புப் பெறுவர்”⁾ என்று எழுதியுள்ளது அல்லவா?
Verse Before the Gospel

மத்தேயு 4: 4b

4அவர் மறுமொழியாக, “⦃‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’⦄ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.
Gospel

லூக்கா 4: 1-13

1இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 2அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார். 3அப்பொழுது அலகை அவரிடம், “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது. 4அதனிடம் இயேசு மறுமொழியாக, ⁽“ ‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’⁾ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.⒫ 5பின்பு, அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, 6அவரிடம், “இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். 7நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்” என்றது. 8இயேசு அதனிடம் மறுமொழியாக, ⁽“ ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக’⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.⒫ 9பின்னர், அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; 10⁽‘உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள்␢ தம் தூதருக்கு உம்மைக் குறித்துக்␢ கட்டளையிடுவார்’⁾ என்றும் 11⁽‘உமது கால் கல்லில் மோதாதபடி␢ அவர்கள் தங்கள் கைகளால்␢ உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’⁾ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது. 12இயேசு அதனிடம் மறுமொழியாக, ⁽“ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’⁾ என்றும் சொல்லியுள்ளதே” என்றார். 13அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.