ஏப்ரல் 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30
இன்றுக்கு

வாசகங்கள்

7 ஏப்ரல், 2028

Lenten Weekday/ John Baptist De La Salle, Priest, Religious Founder. Day of Abstinence from Meat (Age 14 and up).

John Baptist De La Salle, Priest, Religious Founder. Day of Abstinence from Meat (Age 14 and up)
First Reading

எரேமியா 20: 10-13

10⁽‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று␢ பலரும் பேசிக் கொள்கின்றார்கள்;␢ ‘பழிசுமத்துங்கள்; வாருங்கள்,␢ அவன்மேல் பழி சுமத்துவோம்’␢ என்கிறார்கள்.␢ என் நண்பர்கள்கூட␢ என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்;␢ ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்;␢ நாம் அவன்மேல் வெற்றி கொண்டு␢ அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்’␢ என்கிறார்கள்.⁾ 11⁽ஆனால், ஆண்டவர்␢ வலிமை வாய்ந்த வீரரைப் போல␢ என்னோடு இருக்கின்றார்.␢ எனவே, என்னைத் துன்புறுத்துவோர்␢ இடறி விழுவர்.␢ அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள்.␢ அவர்கள் விவேகத்தோடு␢ செயல்படவில்லை;␢ அவர்களின் அவமானம் என்றும்␢ நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.⁾ 12⁽படைகளின் ஆண்டவரே!␢ நேர்மையாளரை சோதித்தறிபவரும்␢ உள்ளுணர்வுகளையும்␢ இதயச் சிந்தனைகளையும்␢ அறிபவரும் நீரே;␢ நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை␢ நான் காணவேண்டும்;␢ ஏனெனில், என் வழக்கை␢ உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.⁾ 13⁽ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்;␢ அவரைப் புகழ்ந்தேத்துங்கள்;␢ ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத்␢ தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 18: 2-3a, 3bc-4, 5-6, 7

2⁽ஆண்டவர் என் கற்பாறை;␢ என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்;␢ நான் புகலிடம் தேடும் மலை அவரே;␢ என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்␢ வல்லமை, என் அரண்.⁾ 3⁽போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி␢ நான் மன்றாடினேன்;␢ என் எதிரிகளிடமிருந்து நான்␢ மீட்கப்பட்டேன்.⁾ 4⁽சாவின் கயிறுகள் என்னை இறுக்கின;␢ அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.⁾ 5⁽பாதாளக் கயிறுகள் என்னைச்␢ சுற்றி இறுக்கின;␢ சாவின் கண்ணிகள் என்னைச்␢ சிக்க வைத்தன.⁾ 6⁽என் நெருக்கடி வேளையில்␢ நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;␢ என் கடவுளை நோக்கிக் கதறினேன்;␢ தமது கோவிலினின்று␢ அவர் என் குரலைக் கேட்டார்;␢ என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.⁾ 7⁽அப்பொழுது, மண்ணுலகம்␢ அசைந்து அதிர்ந்தது;␢ மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன;␢ அவர்தம் கடுஞ்சினத்தால்␢ அவை நடுநடுங்கின.⁾
Verse Before the Gospel

யோவான் 6: 63c, 68c

63வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. 68சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
Gospel

யோவான் 10: 31-42

31அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். 32இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். 33யூதர்கள் மறுமொழியாக, “நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில், மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள். 34இயேசு அவர்களைப் பார்த்து, “‘நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? 35கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. 36அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறை மகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? 37நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம். 38ஆனால், நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என்றார். 39இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.⒫ 40யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். 41பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், “யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால், அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” எனப் பேசிக்கொண்டனர். 42அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.