வாசகங்கள்
6 ஆகஸ்ட், 2028
Transfiguration of the Lord Feast
அன்றைய திருப்பலி
First Reading
தானியேல் 7: 9-10, 13-14
9நான் பார்த்துக் கொண்டிருக்கையில்,⁽அரியணைகள் அமைக்கப்பட்டன;␢ தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்;␢ அவருடைய ஆடை வெண்பனி போலவும்,␢ அவரது தலைமுடி␢ தூய பஞ்சு போலவும் இருந்தன;␢ அவருடைய அரியணை␢ தீக்கொழுந்துகளாயும்␢ அதன் சக்கரங்கள்␢ எரி நெருப்பாயும் இருந்தன.⁾
10⁽அவர் முன்னிலையிலிருந்து␢ நெருப்பாலான ஓடை தோன்றிப்␢ பாய்ந்தோடி வந்தது;␢ பல்லாயிரம் பேர்␢ அவருக்குப் பணிபுரிந்தார்கள்.␢ பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்;␢ நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது;␢ நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.⁾⒫
13⁽இரவில் நான் கண்ட காட்சியாவது:␢ வானத்தின் மேகங்களின் மீது␢ மானிட மகனைப் போன்ற␢ ஒருவர் தோன்றினார்;␢ இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில்␢ அவர் வந்தார்;␢ அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.⁾
14⁽ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும்␢ அவருக்கு கொடுக்கப்பட்டன;␢ எல்லா இனத்தாரும்␢ நாட்டினரும் மொழியினரும்␢ அவரை வழிபட வேண்டும்;␢ அவரது ஆட்சியுரிமை␢ என்றுமுளதாகும்;␢ அதற்கு முடிவே இராது;␢ அவரது அரசு அழிந்து போகாது.⁾⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 97: 1-2, 5-6, 9
1⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகம் மகிழ்வதாக!␢ திரளான தீவு நாடுகள்␢ களிகூர்வனவாக!⁾
2⁽மேகமும் காரிருளும்␢ அவரைச் சூழ்ந்துள்ளன;␢ நீதியும் நேர்மையும்␢ அவரது அரியணையின் அடித்தளம்.⁾
5⁽ஆண்டவர் முன்னிலையில், § அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,␢ மலைகள் மெழுகென உருகுகின்றன.⁾
6⁽வானங்கள் அவரது நீதியை␢ அறிவிக்கின்றன;␢ அனைத்து மக்களினங்களும்␢ அவரது மாட்சியைக் காண்கின்றன.⁾
9⁽ஏனெனில், ஆண்டவரே!␢ உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும்␢ மேலானவர் நீரே!⁾
Second Reading
2 பேதுரு 1: 16-19
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
மத்தேயு 17: 5c
5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
Gospel
லூக்கா 9: 28b-36
28இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.
29அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.
30மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.
31மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
32பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.
33அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
34இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.
35அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
36அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.