வாசகங்கள்
12 ஆகஸ்ட், 2028
Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary/ Jane Frances De Chantal, Married Woman, Religious Founder
Jane Frances De Chantal, Married Woman, Religious Founder
First Reading
அபக்கூக்கு 1: 12 - 2: 4
12⁽ஆண்டவரே, என் கடவுளே,␢ என் தூயவரே␢ தொன்று தொட்டே இருப்பவர்␢ நீர் அல்லவா?␢ நீர்* சாவைக் காண்பதில்லை;␢ ஆண்டவரே, அவர்களை␢ எங்கள் தண்டனைத் தீர்ப்பாய்␢ ஏற்படுத்தியவர் நீரே;␢ புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய்␢ அவர்களை ஆக்கியவரும் நீரே⁾
13⁽தீமையைக் காண நாணும்␢ தூய கண்களை உடையவரே,␢ கொடுமையைப் பார்க்கத் தாங்காதவரே,␢ கயவர்களை நீர்␢ ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்?␢ பொல்லாதவர்␢ தம்மைவிட நேர்மையாளரை␢ விழுங்கும்போது␢ நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?⁾
14⁽நீர் மானிடரைக்␢ கடல் மீன்கள் போலும்␢ தலைமை இல்லா ஊர்வனபோலும்␢ நடத்துகின்றீர்.⁾
15⁽கல்தேய இனத்தார் மற்றெல்லாரையும்␢ தூண்டிலால் பிடிக்கின்றார்கள்;␢ வலையால் வாரி இழுக்கின்றார்கள்;␢ தங்கள் பறியிலே சேர்த்துக்கொண்டு␢ அகமகிழ்ந்து களிப்புறுகின்றார்கள்.⁾
16⁽ஆதலால், தங்கள் வலைக்குப்␢ பலி செலுத்துகின்றார்கள்;␢ பறிக்குத் தூபம் காட்டுகின்றார்கள்;␢ ஏனெனில் அவற்றாலேயே␢ இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்;␢ அறுசுவை உணவைப் பெறுகின்றார்கள்.⁾
17⁽அப்படியானால், அவர்கள்␢ தங்கள் வலையில் இருப்பவற்றை␢ ஓயாமல் வெளியே கொட்டி␢ மக்களினங்களை␢ இரக்கமின்றி இடைவிடாமல்␢ கொன்று குவிக்கவும் வேண்டுமோ?⁾
1⁽[நான் காவல் மாடத்தில் நிற்பேன்;␢ கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்;␢ என் வாயிலாக ஆண்டவர்␢ என்ன கூறப்போகின்றார் என்றும்␢ என் முறையீட்டுக்கு␢ என்ன விடையளிப்பார் என்றும்␢ கண்டறிவதற்காகக் காத்திருப்பேன்.⁾
2⁽ஆண்டவர் எனக்கு அளித்த␢ மறுமொழி இதுவே:␢ “காட்சியை எழுதிவை;␢ விரைவாய் ஓடுகிறவனும்␢ படிக்கும் வண்ணம்␢ பலகைகளில் தெளிவாய் எழுது.⁾
3⁽குறித்த காலத்தில்␢ நிறைவேறுவதற்காகக்␢ காட்சி இன்னும் காத்திருக்கின்றது;␢ முடிவை நோக்கி␢ விரைந்து செல்கின்றது.␢ ஒருக்காலும் பொய்க்காது.␢ அது காலந்தாழ்த்தி␢ வருவதாகத் தோன்றினால்,␢ எதிர்பார்த்துக் காத்திரு;␢ அது நிறைவேறியே தீரும்;␢ காலம் தாழ்த்தாது.⁾
4⁽இதை நம்பாதவரோ உள்ளத்திலே␢ நேர்மையற்றவராய் இருப்பர்;␢ நேர்மையுடையவரோ␢ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 9: 8-9, 10-11, 12-13
8⁽உலகிற்கு அவர்␢ நீதியான தீர்ப்பு வழங்குவார்;␢ மக்களினத்தார்க்கு␢ நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.⁾
9⁽ஒடுக்கப்படுவோருக்கு␢ ஆண்டவரே அடைக்கலம்;␢ நெருக்கடியான வேளைகளில்␢ புகலிடம் அவரே.⁾
10⁽உமது பெயரை அறிந்தோர்␢ உம்மில் நம்பிக்கை கொள்வர்;␢ ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை␢ நீர் கைவிடுவதில்லை.⁾
11⁽சீயோனில் தங்கியிருக்கும்␢ ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;␢ அவருடைய செயல்களை␢ மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;⁾
12⁽ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர்␢ எளியோரை நினைவில் கொள்கின்றார்;␢ அவர்களின் கதறலை␢ அவர் கேட்க மறவார்.⁾
13⁽ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்;␢ என்னைப் பகைப்போரால்␢ எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்;␢ சாவின் வாயினின்று என்னை விடுவியும்.⁾
Alleluia
2 திமொத்தேயு 1: 10
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
மத்தேயு 17: 14-20
14அவர்கள் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள் படியிட்டு,
15“ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான்.
16உம் சீடர்களிடம் அவனைக் கொண்டுவந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை” என்றார்.
17அதற்கு இயேசு, “நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.
18கொண்டுவந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனைவிட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.
19பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டார்கள்.
20இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்”