டிசம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

6 டிசம்பர், 2028

Advent Weekday/ Nicholas, Bishop

Nicholas, Bishop
First Reading

எசாயா 25: 6-10a

6⁽படைகளின் ஆண்டவர் இந்த மலையில்␢ மக்களினங்கள் அனைவருக்கும்␢ சிறந்ததொரு விருந்தை␢ ஏற்பாடு செய்வார்;␢ அதில் சுவைமிக்க பண்டங்களும்,␢ பழரசப் பானமும்,␢ கொழுப்பான இறைச்சித் துண்டுகளும்,␢ வடிகட்டிப் பக்குவப்படுத்திய␢ திராட்சை இரசமும் பரிமாறப்படும்.⁾ 7⁽மக்களினங்கள் அனைவரின்␢ முகத்தை மூடியுள்ள முக்காட்டை␢ இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்;␢ பிற இனத்தார் அனைவரின்␢ துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.⁾ 8⁽என்றுமே இல்லாதவாறு␢ சாவை ஒழித்துவிடுவார்;␢ என் தலைவராகிய ஆண்டவர்␢ எல்லா முகங்களிலிருந்தும்␢ கண்ணீரைத் துடைத்து விடுவார்;␢ தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை␢ இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்;␢ ஏனெனில், ஆண்டவரே␢ இதை உரைத்தார்.⁾ 9⁽அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்;␢ இவரே நம் கடவுள்;␢ இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்;␢ இவர் நம்மை விடுவிப்பார்;␢ இவரே ஆண்டவர்;␢ இவருக்காகவே நாம் காத்திருந்தோம்;␢ இவர் தரும் மீட்பில்␢ நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.”⁾ 10⁽ஆண்டவரின் ஆற்றல்␢ இம் மலையில் தங்கியிருக்கும்;␢ எருக்குழி நீரில்␢ வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல்,␢ மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 23: 1-3a, 3b-4, 5, 6

1⁽ஆண்டவரே என் ஆயர்;␢ எனக்கேதும் குறையில்லை.⁾ 2⁽பசும்புல் வெளிமீது எனை அவர்␢ இளைப்பாறச் செய்வார்;␢ அமைதியான நீர்நிலைகளுக்கு␢ எனை அழைத்துச் செல்வார்.⁾ 3⁽அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;␢ தம் பெயர்க்கேற்ப␢ எனை நீதிவழி நடத்திடுவார்;⁾ 4⁽மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்␢ நான் நடக்க நேர்ந்தாலும்,␢ நீர் என்னோடு இருப்பதால்␢ எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;␢ உம் கோலும் நெடுங்கழியும்␢ என்னைத் தேற்றும்.⁾ 5⁽என்னுடைய எதிரிகளின் கண் முன்னே␢ எனக்கொரு விருந்தினை␢ ஏற்பாடு செய்கின்றீர்;␢ என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;␢ எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.⁾ 6⁽உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்␢ உம் அருள் நலமும் பேரன்பும்␢ என்னைப் புடைசூழ்ந்து வரும்;␢ நானும் ஆண்டவரின் இல்லத்தில் § நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.⁾
Gospel

மத்தேயு 15: 29-37

29இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். 30அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். 31பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். 32இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார். 33அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள். 34இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள். 35தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். 36பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். 37அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.