வாசகங்கள்
10 டிசம்பர், 2028
Second Sunday of Advent
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 11: 1-10
1⁽ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து␢ தளிர் ஒன்று துளிர்விடும்;␢ அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று␢ வளர்ந்து கனிதரும்.⁾
2⁽ஆண்டவரின் ஆவி␢ அவர்மேல் தங்கியிருக்கும்;␢ ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன்,␢ ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய␢ அச்ச உணர்வு — இவற்றை␢ அந்த ஆவி அவருக்கு அருளும்.⁾
3⁽அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில்␢ மகிழ்ந்திருப்பார்.␢ கண் கண்டதைக் கொண்டு மட்டும்␢ அவர் நீதி வழங்கார்;␢ காதால் கேட்டதைக் கொண்டு மட்டும்␢ அவர் தீர்ப்புச் செய்யார்;⁾
4⁽நேர்மையோடு ஏழைகளுக்கு␢ நீதி வழங்குவார்;␢ நடுநிலையோடு நாட்டின்␢ எளியோரது வழக்கை விசாரிப்பார்;␢ வார்த்தை எனும் கோலினால்␢ கொடியவரை அடிப்பார்;␢ உதட்டில் எழும் மூச்சினால்␢ தீயோரை அழிப்பார்.⁾
5⁽நேர்மை அவருக்கு அரைக்கச்சை;␢ உண்மை அவருக்கு இடைக்கச்சை.⁾
6⁽அந்நாளில், ஒநாய்␢ செம்மறியாட்டுக் குட்டியோடு␢ தங்கியிருக்கும்;␢ அக்குட்டியோடு சிறுத்தைப் புலி␢ படுத்துக் கொள்ளும்.␢ கன்றும், சிங்கக்குட்டியும்,␢ கொழுத்த காளையும் கூடி வாழும்;␢ பச்சிளம் குழந்தை அவற்றை␢ நடத்திச் செல்லும்.⁾
7⁽பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்;␢ அவற்றின் குட்டிகள் சேர்ந்து␢ படுத்துக்கிடக்கும்;␢ சிங்கம் மாட்டைப் போல்␢ வைக்கோல் தின்னும்;⁾
8⁽பால் குடிக்கும் குழந்தை␢ விரியன் பாம்பின் வளையில்␢ விளையாடும்;␢ பால்குடி மறந்த பிள்ளை␢ கட்டுவிரியன் வளையினுள்␢ தன் கையை விடும்.⁾
9⁽என் திருமுலை முழுவதிலும்␢ தீமை செய்வார் எவருமில்லை;␢ கேடு விளைவிப்பார் யாருமில்லை;␢ ஏனெனில், கடல் தண்ணீரால்␢ நிறைந்திருக்கிறது போல,␢ மண்ணுலகம் ஆண்டவராம்␢ என்னைப் பற்றிய␢ அறிவால் நிறைந்திருக்கும்.⁾
10⁽அந்நாளில், மக்களினங்களுக்குச்␢ சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப்␢ பிறஇனத்தார் தேடி வருவார்கள்;␢ அவர் இளைப்பாறும் இடம்␢ மாட்சி நிறைந்ததாக இருக்கும்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 72: 1-2, 7-8, 12-13, 17
1⁽கடவுளே, அரசருக்கு உமது␢ நீதித்தீர்ப்பை வழங்கும்␢ ஆற்றலை அளியும்;␢ அரச மைந்தரிடம்␢ உமது நீதி விளங்கச் செய்யும்.⁾
2⁽அவர் உம் மக்களை␢ நீதியோடு ஆள்வாராக!␢ உம்முடையவரான எளியோர்க்கு␢ நீதித்தீர்ப்பு வழங்குவாராக!⁾
7⁽அவர் காலத்தில்␢ நீதி தழைத்தோங்குவதாக;␢ நிலா உள்ள வரையில்␢ மிகுந்த சமாதானம் நிலவுவதாக.⁾
8⁽ஒரு கடலிலிருந்து␢ அடுத்த கடல்வரைக்கும்␢ அவர் ஆட்சி செலுத்துவார்;␢ பேராற்றிலிருந்து␢ உலகின் எல்லை வரைக்கும்␢ அவர் அரசாள்வார்.⁾
12⁽தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும்␢ திக்கற்ற எளியோரையும்␢ அவர் விடுவிப்பார்.⁾
13⁽வறியோர்க்கும் ஏழைகட்கும்␢ அவர் இரக்கம் காட்டுவார்;␢ ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.⁾
17⁽அவர் பெயர்␢ என்றென்றும் நிலைத்திருப்பதாக!␢ கதிரவன் உள்ளவரையில்␢ அவர் பெயர் நிலைப்பதாக!␢ அவர்மூலம் மனிதர்␢ ஆசிபெற விழைவராக!␢ எல்லா நாட்டினரும் அவரை␢ நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!⁾
Second Reading
உரோமையர் 15: 4-9
4முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது.
5கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!
6இவ்வாறு, நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.
7ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே.
8கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும்,
9பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, ⁽“பிறஇனத்தாரிடையே␢ உம்மைப் போற்றுவேன்;␢ உமது பெயருக்குப்␢ புகழ்மாலை சாற்றுவேன்”⁾ என் இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.
Alleluia
லூக்கா 3: 4, 6
4இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ⁽“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: § ‘ஆண்டவருக்காக வழியை␢ ஆயத்தமாக்குங்கள்;␢ அவருக்காக பாதையைச்␢ செம்மையாக்குங்கள்;⁾
6⁽மனிதர் அனைவரும் கடவுள் அருளும்␢ மீட்பைக் காண்பர்’.”⁾⒫
Gospel
மத்தேயு 3: 1-12
1❮1-2❯அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்துக்கு வந்து, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.
2Same as above
3இவரைக் குறித்தே, ⁽“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது;␢ ஆண்டவருக்காக␢ வழியை ஆயத்தமாக்குங்கள்;␢ அவருக்காகப்␢ பாதையைச் செம்மையாக்குங்கள்”⁾ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார்.
4இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
5எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள்.
6அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
7பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?
8நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.
9‘ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை’ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.
10ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.
11நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
12அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.