வாசகங்கள்
3 டிசம்பர், 2028
First Sunday of Advent
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 2: 1-5
1⁽யூதாவையும் எருசலேமையும் குறித்து␢ ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட␢ காட்சி:⁾
2⁽இறுதி நாள்களில் ஆண்டவரின்␢ கோவில் அமைந்துள்ள மலை␢ எல்லா மலைகளுக்குள்ளும்␢ உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்;␢ எல்லாக் குன்றுகளுக்குள்ளும்␢ மேலாய் உயர்த்தப்படும்;␢ மக்களினங்கள் அதைநோக்கிச்␢ சாரை சாரையாய் வருவார்கள்.⁾
3⁽வேற்றினத்தார் பலர்␢ அங்கு வந்து சேர்ந்து␢ ‘புறப்படுங்கள்␢ ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;␢ யாக்கோபின் கடவுளின்␢ கோவிலுக்குப் போவோம்.␢ அவர் தம் வழிகளை␢ நமக்குக் கற்பிப்பார்;␢ நாமும் அவர் நெறிகளில்␢ நடப்போம்’ என்பார்கள்.␢ ஏனெனில், சீயோனிலிருந்தே␢ திருச்சட்டம் வெளிவரும்;␢ எருசலேமிலிருந்தே␢ ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.⁾
4⁽அவர் வேற்றினத்தாரிடையே உள்ள␢ வழக்குகளைத் தீர்த்து வைப்பார்;␢ பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்;␢ அவர்கள் தங்கள் வாள்களைக்␢ கலப்பைக் கொழுக்களாகவும்␢ தங்கள் ஈட்டிகளைக்␢ கருக்கரிவாள்களாகவும்␢ அடித்துக் கொள்வார்கள்,␢ ஓர் இனத்திற்கு எதிராக␢ மற்றோர் இனம் வாள் எடுக்காது;␢ அவர்கள் இனி ஒருபோதும்␢ போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.⁾
5⁽யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள்␢ நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்;⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 122: 1-2, 3-4ab, 4cd-5, 6-7, 8-9
1⁽“ஆண்டவரது இல்லத்திற்குப்␢ போவோம்”, என்ற அழைப்பை␢ நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.⁾
2⁽எருசலேமே! இதோ,␢ நாங்கள் அடியெடுத்து வைத்து␢ உன் வாயில்களில் நிற்கின்றோம்.⁾
3⁽எருசலேம் செம்மையாக␢ ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.⁾
4⁽ஆண்டவரின் திருக்குலத்தார்␢ அங்கே செல்கின்றனர்;␢ இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட␢ கட்டளைக்களுக்கிணங்க␢ ஆண்டவரது பெயருக்கு அவர்கள்␢ நன்றி செலுத்தச் செல்வார்கள்.⁾
5⁽அங்கே நீதி வழங்க␢ அரியணைகள் இருக்கின்றன.␢ அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.⁾
6⁽எருசலேமில்␢ சமாதானம் நிலைத்திருக்கும்படி␢ வேண்டிக்கொள்ளுங்கள்;␢ “உன்னை விரும்புவோர்␢ வளமுடன் வாழ்வார்களாக!⁾
7⁽உன் கோட்டைகளுக்குள்␢ அமைதி நிலவுவதாக!␢ உம் மாளிகைகளில்␢ நல்வாழ்வு இருப்பதாக!⁾
8⁽உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று␢ நான் என் சகோதரர் சார்பிலும்␢ என் நண்பர் சார்பிலும்␢ உன்னை வாழ்த்துகின்றேன்.⁾
9⁽நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம்␢ இங்கே இருப்பதால், உன்னில்␢ நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.⁾
Second Reading
உரோமையர் 13: 11-14
11இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.
12இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!
13பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக!
14தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.
Alleluia
திருப்பாடல்கள் 85: 8
8⁽ஆண்டவராம் இறைவன்␢ உரைப்பதைக் கேட்பேன்;␢ தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு␢ நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;␢ அவர்களோ மடமைக்குத்␢ திரும்பிச் செல்லலாகாது.⁾
Gospel
மத்தேயு 24: 37-44
37நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும்.
38வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.
39வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும்.
40இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.
41இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
42விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.
43இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்.
44எனவே, நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”