வாசகங்கள்
4 மார்ச், 2026
Wednesday of the Second Week of Lent
அன்றைய திருப்பலி
Reading I
எரேமியா 18:18-20
18⁽அப்போது அவர்கள் “வாருங்கள்,␢ எரேமியாவுக்கு எதிராகச்␢ சூழ்ச்சி செய்வோம்.␢ குருக்களிடமிருந்து சட்டமும்,␢ ஞானிகளிடமிருந்து அறிவுரையும்,␢ இறைவாக்கினரிடமிருந்து␢ இறைவாக்கும் எடுபடாது.␢ எனவே, அவர்மீது குற்றம் சாட்டுவோம்.␢ அவர் சொல்வதைக்␢ கேட்கவேண்டாம்” என்றனர்.⁾
19⁽ஆண்டவரே, என்னைக் கவனியும்;␢ என் எதிரிகள் சொல்வதைக் கேளும்.⁾
20⁽நன்மைக்குக் கைம்மாறு தீமையா?␢ என் உயிரைப் போக்கக்␢ குழிபறித்திருக்கின்றார்கள்;␢ அவர்கள்மேல் உமக்கிருந்த␢ சினத்தைப் போக்குவதற்காக␢ அவர்களைக் குறித்து␢ நல்லதை எடுத்துச் சொல்வதற்கு␢ நான் உம்முன் வந்து நின்றதை␢ நினைவுகூரும்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 31:5-6, 14, 15-16
5⁽உமது கையில்␢ என் உயிரை ஒப்படைக்கின்றேன்;␢ வாக்குப் பிறழாத இறைவனாகிய␢ ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர்.⁾
6⁽நானோ, பயனற்ற சிலைகளில்␢ பற்றுடையோரை வெறுத்து,␢ ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.⁾
14⁽ஆண்டவரே, நான் உம்மீது␢ நம்பிக்கை வைத்துள்ளேன்;␢ ‛நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.⁾
15⁽என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும்␢ உமது கையில் உள்ளது;␢ என் எதிரிகளின் கையினின்றும்␢ என்னைத் துன்புறுத்துவோரின்␢ கையினின்றும் என்னை விடுவித்தருளும்.⁾
16⁽உமது முகத்தின் ஒளி␢ அடியேன் மீது வீசும்படி செய்யும்;␢ உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.⁾
Verse Before the Gospel
யோவான் 8:12
12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.
Gospel
மத்தேயு 20:17-28
17இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து,
18“இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.
19அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால், அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்று அவர்களிடம் கூறினார்.
20பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.
21“உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.
22அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள் “எங்களால் இயலும்” என்றார்கள்.
23அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.
24இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.
25இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள்.
26உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
27உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.
28இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.