மார்ச் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
28293031
இன்றுக்கு

வாசகங்கள்

27 மார்ச், 2027

Holy Saturday

அன்றைய திருப்பலி
First Reading

தொடக்க நூல் 1: 1 - 2: 2 or 1: 1, 26-31a

1தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, 2மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. 3அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். 4கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். 5கடவுள் ஒளிக்குப் ‘பகல்’ என்றும் இருளுக்கு ‘இரவு’ என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.⒫ 6அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். 7கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. 8கடவுள் வானத்திற்கு ‘விண்ணுலகம்’ என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.⒫ 9அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 10கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். 11அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 12புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். 13மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.⒫ 14அப்பொழுது கடவுள், “பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! 15அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 16கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். 17கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; 18பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். 19மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.⒫ 20அப்பொழுது கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். 21இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். 22கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார். 23மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.⒫ 24அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 25கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.⒫ 26அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார்.⒫ 27⁽கடவுள் தம் உருவில்␢ மானிடரைப்* படைத்தார்;␢ கடவுளின் உருவிலேயே␢ அவர்களைப் படைத்தார்;␢ ஆணும் பெண்ணுமாக␢ அவர்களைப் படைத்தார்.⁾⒫ 28கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார். 29அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். 30எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. 31கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. 1விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. 2மேலும், கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 104: 1-2, 5-6, 10, 12, 13-14, 24, 35 or திருப்பாடல்கள் 33: 4-5, 6-7, 12-13, 20 and 22

1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!␢ நீர் மாண்பையும் மாட்சியையும்␢ அணிந்துள்ளவர்.⁾ 2⁽பேரொளியை␢ ஆடையென அணிந்துள்ளவர்;␢ வான்வெளியைக்␢ கூடாரமென விரித்துள்ளவர்;⁾ 5⁽நீவீர் பூவுலகை அதன்␢ அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்;␢ அது என்றென்றும் அசைவுறாது.⁾ 6⁽அதனை ஆழ்கடல்␢ ஆடையென மூடியிருந்தது;␢ மலைகளுக்கும் மேலாக␢ நீர்த்திரள் நின்றது;⁾ 10⁽பள்ளத்தாக்குகளில்␢ நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்;␢ அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;⁾ 12⁽நீருற்றுகளின் அருகில்␢ வானத்துப் பறவைகள்␢ கூடுகட்டிக் கொள்கின்றன;␢ அவை மரக்கிளைகளினின்று␢ இன்னிசை இசைக்கின்றன;⁾ 13⁽உம் மேலறைகளினின்று␢ மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்;␢ உம் செயல்களின் பணியால்␢ பூவுலகம் நிறைவடைகின்றது.⁾ 14⁽கால்நடைகளுக்கெனப்␢ புல்லை முளைக்கச் செய்கின்றீர்;␢ மானிடருக்கெனப் பயிர்வகைகளை␢ வளரச் செய்கின்றர்;␢ இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு␢ உணவு கிடைக்கச் செய்கின்றீர்;⁾ 24⁽ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்␢ எத்தனை எத்தனை!␢ நீர் அனைத்தையும்␢ ஞானத்தோடு செய்துள்ளீர்!␢ பூவுலகம்␢ உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.⁾ 35⁽பாவிகள் பூவுலகினின்று␢ ஒழிந்து போவார்களாக!␢ தீயோர்கள் இனி␢ இல்லாது போவார்களாக!␢ என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு!␢ அல்லேலூயா!⁾
Second Reading

தொடக்க நூல் 22: 1-18 or 22: 1-2, 9a, 10-13, 15-18

1இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் “இதோ! அடியேன்” என்றார். 2அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்” என்றார். 3அவ்வாறே, ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். 4மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். 5உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்” என்றார். 6பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு, இருவரும் சேர்ந்து சென்றனர். 7அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி “அப்பா!” என, அவர், “என்ன? மகனே!” என்று கேட்டார். அதற்கு அவன், “இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று வினவினான். 8அதற்கு ஆபிரகாம், “எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே” என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.⒫ 9ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். 10ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். 11அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று “ஆபிரகாம்! ஆபிரகாம்” என்று கூப்பிட, அவர் “இதோ! அடியேன்” என்றார். 12அவர், “பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்” என்றார். 13அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். 14எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு ‘யாவேயிரே’ என்று பெயரிட்டார். ஆதலால்தான் ‘மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்’ என்று இன்றுவரை வழங்கி வருகிறது.⒫ 15ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, 16“ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். 17ஆதலால், நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். 18மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 16: 5, 8, 9-10, 11

5⁽ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;␢ அவரே என் கிண்ணம்;␢ எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;⁾ 8⁽ஆண்டவரை எப்போதும்␢ என் கண்முன் வைத்துள்ளேன்;␢ அவர் என் வலப்பக்கம் உள்ளார்;␢ எனவே, நான் அசைவுறேன்.⁾ 9⁽என் இதயம் அக்களிக்கின்றது;␢ என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;␢ என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.⁾ 10⁽ஏனெனில், என்னைப்␢ பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;␢ உம் அன்பனைப் படுகுழியைக்␢ காண விடமாட்டீர்.⁾ 11⁽வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;␢ உமது முன்னிலையில் எனக்கு␢ நிறைவான மகிழ்ச்சி உண்டு;␢ உமது வலப்பக்கத்தில்␢ எப்போதும் பேரின்பம் உண்டு.⁾
Third Reading

விடுதலைப் பயணம் 14: 15 - 15: 1

15ஆண்டவர் மோசேயை நோக்கி, “ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். 16கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். 17நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். 18பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரைவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, ‘நானே ஆண்டவர்’ என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்” என்றார்.⒫ 19இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது. 20அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.⒫ 21மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. 22வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். 23எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர். 24பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். 25அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், “இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்” என்றனர்.⒫ 26ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு” என்றார். 27மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். 28திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. 29ஆனால், இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. 30இவ்வாறு, ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். 31எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும், அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர். 1அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:⁽ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; § ஏனெனில், அவர் மாட்சியுடன்␢ வெற்றிபெற்றார்;␢ குதிரையையும், குதிரை வீரனையும் § கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.⁾
Responsorial Psalm

விடுதலைப் பயணம் 15: 1-2, 3-4, 5-6, 17-18

1அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:⁽ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; § ஏனெனில், அவர் மாட்சியுடன்␢ வெற்றிபெற்றார்;␢ குதிரையையும், குதிரை வீரனையும் § கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.⁾ 2⁽ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்.␢ அவரே என் விடுதலை; என் கடவுள்.␢ அவரை நான் புகழ்ந்தேத்துவேன்.␢ அவரே என் மூதாதையரின் கடவுள்;␢ அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.⁾ 3⁽போரில் வல்லவர் ஆண்டவர்;␢ ‛ஆண்டவர்’ என்பது அவர் பெயராம்.⁾ 4⁽பார்வோனின் தேர்களையும் படையையும்␢ அவர் கடலில் தள்ளிவிட்டார்;␢ அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள்␢ செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.⁾ 5⁽ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல்␢ மூழ்கிப் போயினர்;␢ ஆழங்கள் அவர்களை␢ மூடிக்கொண்டன.⁾ 6⁽ஆண்டவரே, உம் வலக்கை␢ வலிமையில் மாண்புற்றது;␢ ஆண்டவரே, உமது வலக்கை␢ பகைவரைச் சிதறடிக்கின்றது.⁾ 17⁽ஆண்டவரே, எம் தலைவரே!␢ நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும்,␢ உம் கைகள் உருவாக்கிய␢ திருத்தலமும் அமைந்துள்ள உம்␢ உரிமைச் சொத்தான மலைக்கு␢ அவர்களைக் கொண்டு சென்று␢ நிலைநாட்டினீர்.⁾ 18⁽ஆண்டவர் என்றென்றும்␢ அரசாள்வார்.⁾
Fourth Reading

எசாயா 54: 5-14

5⁽ஏனெனில், உன்னை உருவாக்கியவரே␢ உன் கணவர்,␢ ‘படைகளின் ஆண்டவர்’ என்பது␢ அவர்தம் பெயராம்.␢ இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்;␢ ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என␢ அவர் அழைக்கப்படுகின்றார்.⁾ 6⁽ஏனெனில், கைவிடப்பட்டு␢ மனமுடைந்துபோன துணைவிபோலும்,␢ தள்ளப்பட்ட இளம் மனைவி போலும்␢ இருக்கும் உன்னை␢ ஆண்டவர் அழைத்துள்ளார்,␢ என்கிறார் உன் கடவுள்.⁾ 7⁽நொடிப்பொழுதே␢ நான் உன்னைக் கைவிட்டேன்;␢ ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை␢ மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.⁾ 8⁽பொங்கியெழும் சீற்றத்தால்␢ இமைப்பொழுதே என்முகத்தை␢ உனக்கு மறைத்தேன்;␢ ஆயினும் என்றுமுள பேரன்பால்␢ உனக்கு இரக்கம் காட்டுவேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾ 9⁽எனக்கு இது நோவாவின் நாள்களில்␢ நடந்ததுபோல் உள்ளது;␢ நோவாவின் காலத்துப் பெருவெள்ளம்␢ இனி மண்ணுலகின்மேல்␢ பாய்ந்து வராது என்று␢ நான் ஆணையிட்டேன்;␢ அவ்வாறே உம்மீதும்␢ சீற்றம் அடையமாட்டேன் என்றும்,␢ உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும்␢ ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.⁾ 10⁽மலைகள் நிலை சாயினும்␢ குன்றுகள் இடம் பெயரினும்␢ உன்மீது நான் கொண்ட பேரன்போ␢ நிலை சாயாது;␢ என் சமாதான உடன்படிக்கையோ␢ அசைவுறாது, என்கிறார்␢ உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.⁾ 11⁽துயருற்றவளே, சூறைக்காற்றால்␢ அலைக்கழிக்கப்பட்டவளே,␢ ஆறுதல் பெறாது தவிப்பவளே,␢ இதோ, மாணிக்கக்கற்களால்␢ உன் அடித்தளத்தை அமைப்பேன்,␢ நீலக்கற்களால் உன்␢ நிலைக்களத்தை நிறுவுவேன்.⁾ 12⁽உன் கால்மாடங்களைச்␢ சிவப்புக் கற்களாலும்,␢ உன் வாயில்களைப்␢ பளிங்குக் கற்களாலும்␢ உன் மதில்கள் அனைத்தையும்␢ விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன்.⁾ 13⁽உன் குழந்தைகள் அனைவருக்கும்␢ ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்;␢ உன் பிள்ளைகள்␢ நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.⁾ 14⁽நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்;␢ ஒடுக்கப்பட்ட நிலை␢ உன்னைவிட்டு அகன்றுபோம்;␢ நீ அஞ்சாதே!␢ திகில் உன்னை அணுகாது.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 30: 2, 4, 5-6, 11-12, 13

2⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உம்மிடம் உதவி வேண்டினேன்;␢ என்னை நீர் குணப்படுத்துவீர்.⁾ 4⁽இறையன்பரே, ஆண்டவரைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ தூயவராம் அவரை நினைந்து␢ நன்றி கூறுங்கள்.⁾ 5⁽அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான்␢ இருக்கும்; அவரது கருணையோ␢ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;␢ மாலையில் அழுகை;␢ காலையிலோ ஆர்ப்பரிப்பு.⁾ 6⁽நான் வளமுடன் வாழ்ந்தபோது,␢ ‛என்னை ஒருபோதும்␢ அசைக்க முடியாது’ என்றேன்.⁾ 11⁽நீர் என் புலம்பலைக்␢ களிநடனமாக மாற்றிவிட்டீர்;␢ என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு␢ எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.⁾ 12⁽ஆகவே என் உள்ளம்*␢ உம்மைப் புகழ்ந்து பாடும்;␢ மௌனமாய் இராது;␢ என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.⁾
Fifth Reading

எசாயா 55: 1-11

1⁽தாகமாய் இருப்பவர்களே,␢ நீங்கள் அனைவரும்␢ நீர்நிலைகளுக்கு வாருங்கள்;␢ கையில் பணமில்லாதவர்களே,␢ நீங்களும் வாருங்கள்;␢ தானியத்தை வாங்கி உண்ணுங்கள்,␢ வாருங்கள், காசு பணமின்றித்␢ திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.⁾ 2⁽உணவாக இல்லாத ஒன்றிற்காக␢ நீங்கள் ஏன் பணத்தைச்␢ செலவிடுகின்றீர்கள்?␢ நிறைவு தராத ஒன்றிற்காய்␢ ஏன் உங்கள் உழைப்பை␢ வீணாக்குகிறீர்கள்?␢ எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்;␢ நல்லுணவை உண்ணுங்கள்;␢ கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.⁾ 3⁽எனக்குச் செவிகொடுங்கள்,␢ என்னிடம் வாருங்கள்;␢ கேளுங்கள்; அப்பொழுது␢ நீங்கள் வாழ்வடைவீர்கள்.␢ நான் உங்களுடன் ஓர்␢ என்றுமுள உடன்படிக்கையைச்␢ செய்து கொள்வேன்;␢ தாவீதுக்கு நான் காட்டிய␢ மாறாத பேரன்பை␢ உங்களுக்கும் காட்டுவேன்.⁾ 4⁽நான் அவனை␢ மக்களினங்களுக்குச் சாட்சியாகவும்,␢ வேற்றினங்களுக்குத் தலைவராகவும்␢ தளபதியாகவும் ஏற்படுத்தினேன்.⁾ 5⁽இதோ, நீ அறியாத␢ பிற இனமக்களை அழைப்பாய்;␢ உன் கடவுளாகிய ஆண்டவரை,␢ இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு,␢ உன்னை அறியாத பிறஇனத்தார்␢ உன்னிடம் ஓடிவருவர்.␢ ஏனெனில், அவர் உன்னை␢ மேன்மைப்படுத்தியுள்ளார்.⁾ 6⁽ஆண்டவரைக் காண்பதற்கு␢ வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்;␢ அவர் அண்மையில் இருக்கும்போதே␢ அவரை நோக்கி மன்றாடுங்கள்.⁾ 7⁽கொடியவர் தம் வழிமுறையையும்,␢ தீயவர் தம் எண்ணங்களையும்␢ விட்டுவிடுவார்களாக;␢ அவர்கள் ஆண்டவரிடம்␢ திரும்பி வரட்டும்; அவர்␢ அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்;␢ அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்;␢ ஏனெனில், மன்னிப்பதில்␢ அவர் தாராள மனத்தினர்.⁾ 8⁽என் எண்ணங்கள்␢ உங்கள் எண்ணங்கள் அல்ல,␢ உங்கள் வழிமுறைகள்␢ என் வழிமுறைகள் அல்ல,␢ என்கிறார் ஆண்டவர்.⁾ 9⁽மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம்␢ மிக உயர்ந்து இருப்பதுபோல␢ உங்கள் வழிமுறைகளைவிட␢ என் வழிமுறைகளும்,␢ உங்கள் எண்ணங்களைவிட␢ என் எண்ணங்களும்␢ மிக உயர்ந்திருக்கின்றன.⁾ 10⁽மழையும் பனியும்␢ வானத்திலிருந்து இறங்கி வருகின்றன;␢ அவை நிலத்தை நனைத்து,␢ முளை அரும்பி வளரச் செய்து,␢ விதைப்பவனுக்கு விதையையும்␢ உண்பவனுக்கு உணவையும்␢ கொடுக்காமல்,␢ அங்குத் திரும்பிச் செல்வதில்லை.⁾ 11⁽அவ்வாறே, என் வாயிலிருந்து␢ புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்.␢ அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி,␢ எதற்காக நான் அதை அனுப்பினேனோ␢ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல்␢ வெறுமையாய் என்னிடம்␢ திரும்பி வருவதில்லை.⁾
Responsorial Psalm

எசாயா 12: 2-3, 4, 5-6

2⁽இறைவன் என் மீட்பர்,␢ அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்,␢ நான் அஞ்சமாட்டேன்;␢ ஆண்டவரே என் ஆற்றல்,␢ அவரையே பாடுவேன்,␢ என் மீட்பும் அவரே.”⁾ 3⁽மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள்␢ அகமகிழ்வோடு தண்ணீர்␢ முகந்து கொள்வீர்கள்.⁾ 4⁽அந்நாளில் நீங்கள் சொல்வதாவது:␢ ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;␢ அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;␢ மக்களினங்களிடையே␢ அவர்செயல்களை அறிவியுங்கள்;␢ அவர் திருப்பெயர் உயர்க எனப்␢ பறைசாற்றுங்கள்.⁾ 5⁽ஆண்டவருக்குப் புகழ்ப்பா␢ அமைத்துப் பாடுங்கள்;␢ ஏனெனில் அவர் மாட்சியுறும்␢ செயல்களைப் புரிந்துள்ளார்;␢ அனைத்துலகும் இதை␢ அறிந்துகொள்வதாக.⁾ 6⁽சீயோனில் குடியிருப்போரே!␢ ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்;␢ இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே␢ சிறந்து விளங்குகின்றார்.⁾
Sixth Reading

பாரூக்கு (எரேமியாவின் மடல்) 3: 9-15, 32 - 4: 4

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 19: 8, 9, 10, 11

8⁽ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;␢ அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.␢ ஆண்டவரின் கட்டளைகள்␢ ஒளிமயமானவை;␢ அவை கண்களை ஒளிர்விக்கின்றன.⁾ 9⁽ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;␢ அது எந்நாளும் நிலைத்திருக்கும்.␢ ஆண்டவரின் நீதிநெறிகள்␢ உண்மையானவை; § அவை முற்றிலும் நீதியானவை.⁾ 10⁽அவை பொன்னினும்,␢ பசும் பொன்னினும் மேலாக␢ விலைமிக்கவை; தேனினும்,␢ தேனடையினின்று சிந்தும்␢ தெளி தேனினும் இனிமையானவை.⁾ 11⁽அவற்றால் அடியேன்␢ எச்சரிக்கப்படுகின்றேன்;␢ அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு␢ மிகுந்த பரிசுண்டு.⁾
Seventh Reading

எசேக்கியேல் 36: 16-17a, 18-28

16ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது: 17மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். அவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது. 18எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். 19நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுக்குத் தீர்ப்பிட்டேன். 20வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து “இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று” என்று கூறப்பட்டது. 21இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். 22எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன். 23நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். 24நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். 25நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். 26நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். 27என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். 28நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 42: 3, 5; 43: 3, 4 or Isaiah 12: 2-3, 4bcd, 5-6 or திருப்பாடல்கள் 51:12-13, 14-15, 18-19

3⁽இரவும் பகலும் என் கண்ணீரே␢ எனக்கு உணவாயிற்று;␢ ‛உன் கடவுள் எங்கே?’ என்று␢ என்னிடம் *தீயோர் கேட்கின்றனர்.*⁾ 5⁽என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?␢ நீ கலக்கமுறுவது ஏன்? § கடவுளையே நம்பியிரு;␢ என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு␢ இன்னும் நான் அவருக்கு␢ நன்றி செலுத்துவேன்.⁾ 3⁽உம் ஒளியையும் உண்மையையும்␢ அனுப்பியருளும்;␢ அவை என்னை வழி நடத்தி,␢ உமது திருமலைக்கும்␢ உமது உறைவிடத்திற்கும்␢ கொண்டுபோய்ச் சேர்க்கும்.⁾ 4⁽அப்பொழுது, நான்␢ கடவுளின் பீடம் செல்வேன்;␢ என் மன மகிழ்ச்சியாகிய␢ இறைவனிடம் செல்வேன்;␢ கடவுளே! என் கடவுளே!␢ யாழிசைத்து ஆர்ப்பரித்து␢ உம்மைப் புகழ்ந்திடுவேன்.⁾
Epistle Reading

உரோமையர் 6: 3-11

3திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? 4இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.⒫ 5அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். 6நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு, பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். 7ஏனெனில், இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? 8கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. 9இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். 10அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.⒫ 11அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 118: 1-2, 16-17, 22-23

1⁽ஆண்டவருக்கு நன்றி␢ செலுத்துங்கள்.␢ ஏனெனில் அவர் நல்லவர்;␢ என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 2⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!⁾ 16⁽ஆண்டவரது வலக்கை␢ உயர்ந்தோங்கி உள்ளது;␢ ஆண்டவரது வலக்கை␢ வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.⁾ 17⁽நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;␢ ஆண்டவரின் செயல்களை␢ விரித்துரைப்பேன்;⁾ 22⁽கட்டுவோர் புறக்கணித்த கல்லே␢ கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!⁾ 23⁽ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!␢ நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!⁾
Gospel

மாற்கு 16: 1-7

1ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். 2வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். 3“கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். 4ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். 5பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். 6அவர் அவர்களிடம், “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். 7நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.