வாசகங்கள்
9 செப்டம்பர், 2028
Peter Claver, Priest, Religious, Missionary Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
1 கொரிந்தியர் 4: 6b-15
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 145: 17-18, 19-20, 21
17⁽ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்␢ நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்␢ இரக்கச் செயல்களே.⁾
18⁽தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,␢ உண்மையாய்த் தம்மை நோக்கி␢ மன்றாடும் யாவருக்கும்,␢ ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.⁾
19⁽அவர் தமக்கு அஞ்சி நடப்போரின்␢ விருப்பத்தை நிறைவேற்றுவார்;␢ அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து␢ அவர்களைக் காப்பாற்றுவார்.⁾
20⁽ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும்␢ அனைவரையும் பாதுகாக்கின்றார்;␢ பொல்லார் அனைவரையும் அழிப்பார்.⁾
21⁽என் வாய் ஆண்டவரின் புகழை␢ அறிவிப்பதாக!␢ உடல்கொண்ட அனைத்தும்␢ அவரது திருப்பெயரை␢ என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!⁾
Alleluia
யோவான் 14: 6
6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫
Gospel
லூக்கா 6: 1-5
1ஓர் ஓய்வுநாளில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்
2பரிசேயருள் சிலர், “ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.
3அதற்கு இயேசு மறுமொழியாக, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?
4அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்று கூறினார்.
5மேலும் அவர்களிடம், “ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.