வாசகங்கள்
22 ஜனவரி, 2026
Day of Prayer for the Legal Protection of Unborn Children
அன்றைய திருப்பலி
Reading I
1 சாமுவேல் 18:6-9; 19:1-7
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 56:2-3, 9-10, 10-11, 12-13
2⁽என் பகைவர் நாள்தோறும்␢ கொடுமைப்படுத்துகின்றனர்;␢ மிகப் பலர் என்னை ஆணவத்துடன்␢ எதிர்த்துப் போரிடுவோர்.⁾
3⁽அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில்,␢ உம்மையே நான் நம்பியிருப்பேன்.⁾
9⁽நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில்␢ என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்;␢ அப்போது, கடவுள்␢ என் பக்கம் இருக்கின்றார் என்பதை␢ நான் உறுதியாய் அறிவேன்.⁾
10⁽கடவுளின் வாக்கை␢ நான் புகழ்கின்றேன்;␢ ஆண்டவனின் வாக்கை␢ நான் புகழ்கின்றேன்.⁾
11⁽கடவுளையே நம்பியிருக்கின்றேன்;␢ எதற்கும் அஞ்சேன்;␢ மானிடர் எனக்கெதிராய்␢ என்ன செய்ய முடியும்?⁾
12⁽கடவுளே, நான் உமக்குச் செய்த␢ பொருத்தனைகளை மறக்கவில்லை;␢ உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்.⁾
13⁽ஏனெனில், சாவினின்று␢ என் உயிரை நீர் மீட்டருளினீர்;␢ வாழ்வோரின் ஒளியில்,␢ கடவுளின் முன்னிலையில்␢ நான் நடக்கும் பொருட்டு␢ என் அடிகள் சறுக்காதபடி␢ காத்தீர் அன்றோ!⁾
Alleluia
2 திமொத்தேயு 1:10
10நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.⒫
Gospel
மாற்கு 3:7-12
7இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா,
8எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.
9மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.
10ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்.
11தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, “இறைமகன் நீரே” என்று கத்தின.
12அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.