ஜனவரி 2026

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

27 ஜனவரி, 2026

Tuesday of the Third Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

2 சாமுவேல் 6:12-15, 17-19

12ஆண்டவரின் பேழையை முன்னிட்டு ஓபோது — ஏதோமின் வீட்டாருக்கும் அவனுக்குரிய அனைத்துக்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார் என்று அரசர் தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது — ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார். 13ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். 14நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக்கொண்டிருந்தார். 15தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள். 17ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவு பலிகளையும் செலுத்தினார். 18எரிபலிகளையும் நல்லுறவு பலிகளையும் செலுத்தியபின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார். 19பிறகு, தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 24:7, 8, 9, 10

7⁽வாயில்களே, உங்கள் நிலைகளை␢ உயர்த்துங்கள்;␢ தொன்மைமிகு கதவுகளே,␢ உயர்ந்து நில்லுங்கள்;␢ மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.⁾ 8⁽மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?␢ வலிமையும் ஆற்றலும் கொண்ட␢ ஆண்டவர் இவர்; இவரே␢ போரில் வல்லவரான ஆண்டவர்.⁾ 9⁽வாயில்களே,␢ உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;␢ தொன்மைமிகு கதவுகளே,␢ உயர்ந்து நில்லுங்கள்;␢ மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.⁾ 10⁽மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?␢ படைகளின் ஆண்டவர் இவர்;␢ இவரே மாட்சிமிகு மன்னர். (சேலா)⁾
Alleluia

மத்தேயு 11:25

25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel

மாற்கு 3:31-35

31அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். 32அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள். 33அவர் அவர்களைப் பார்த்து, “என்தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, 34தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. 35கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.