ஜனவரி 2026

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

11 ஜனவரி, 2026

The Baptism of the Lord

அன்றைய திருப்பலி
Reading I

எசாயா 42:1-4, 6-7

1⁽இதோ! என் ஊழியர்! அவருக்கு நான்␢ ஆதரவு அளிக்கிறேன்;␢ நான் தேர்ந்துகொண்டவர் அவர்;␢ அவரால் என் நெஞ்சம்␢ பூரிப்படைகின்றது;␢ அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்;␢ அவர் மக்களினங்களுக்கு␢ நீதி வழங்குவார்.⁾ 2⁽அவர் கூக்குரலிடமாட்டார்;␢ தம்குரலை உயர்த்தமாட்டார்;␢ தம் குரலொலியைத்␢ தெருவில் எழுப்பவுமாட்டார்.⁾ 3⁽நெரிந்த நாணலை முறியார்;␢ மங்கி எரியும் திரியை அணையார்;␢ உண்மையாகவே␢ நீதியை நிலை நாட்டுவார்.⁾ 4⁽உலகில் நீதியை நிலைநாட்டும்வரை␢ அவர் சோர்வடையார்;␢ மனம் தளரமாட்டார்;␢ அவரது நீதிநெறிக்காகத்␢ தீவு நாட்டினர் காத்திருப்பர்.⁾ 6⁽ஆண்டவராகிய நான்␢ நீதியை நிலைநாட்டுமாறு␢ உம்மை அழைத்தேன்;␢ உம் கையைப் பற்றிப்பிடித்து,␢ உம்மைப் பாதுகாப்பேன்;␢ மக்களுக்கு உடன்படிக்கையாகவும்␢ பிற இனத்தாருக்கு ஒளியாகவும்␢ நீர் இருக்குமாறு செய்வேன்.⁾ 7⁽பார்வை இழந்தோரின்␢ கண்களைத் திறக்கவும்,␢ கைதிகளின் தளைகளை அறுக்கவும்,␢ இருளில் இருப்போரைச்␢ சிறையினின்று மீட்கவும்␢ உம்மை அழைத்தேன்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 29:1-2, 3-4, 3, 9-10

1⁽இறைவனின் மைந்தரே!␢ மாட்சியையும் வலிமையையும்␢ ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.␢ ஆம்! ஆண்டவருக்கே § உரித்தாக்குங்கள்!⁾ 2⁽ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை␢ அவருக்கு உரித்தாக்குங்கள்;␢ தூய மாட்சி இலங்கும்␢ ஆண்டவரை வழிபடுங்கள்.⁾ 3⁽ஆண்டவரின் குரல்␢ கடல்மேல் ஒலிக்கின்றது;␢ மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்;␢ ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் § வீற்றிருக்கின்றார்.⁾ 4⁽ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது;␢ ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.⁾ 9⁽ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை␢ முறித்து விடுகின்றது*;␢ காடுகளை வெறுமை ஆக்குகின்றது;␢ அவரது கோவிலில் உள்ள அனைவரும்␢ ‛இறைவனுக்கு மாட்சி’ என்று␢ ஆர்ப்பரிக்கின்றனர்.⁾ 10⁽ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது␢ வீற்றிருக்கின்றார்;␢ ஆண்டவர் என்றென்றும்␢ அரசராக வீற்றிருக்கின்றார்.⁾
Reading II

திருத்தூதர் பணிகள் 10:34-38

34அப்போது பேதுரு பேசத் தொடங்கி, “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். 35எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். 36இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்றும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். 37திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். 38கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.
Alleluia

Cf. Mark 9:7

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 3:13-17

13அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். 14யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார். 15இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். 16இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். 17அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.