வாசகங்கள்
13 ஜனவரி, 2028
Ordinary Weekday/ Hilary, Bishop, Doctor
Hilary, Bishop, Doctor
First Reading
1 சாமுவேல் 4: 1-11
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 44: 10-11, 14-15, 24-25
10⁽எங்கள் பகைவருக்கு நாங்கள்␢ புறங்காட்டி ஓடும்படிச் செய்தீர்.␢ எங்களைப் பகைப்போர்␢ எங்களைக் கொள்ளையிட்டனர்.⁾
11⁽உணவுக்காக வெட்டப்படும்␢ ஆடுகளைப்போல்␢ எங்களை ஆக்கிவிட்டீர்.␢ வேற்றினத்தாரிடையே எங்களைச் § சிதறியோடச் செய்தீர்.⁾
14⁽வேற்றினத்தாரிடையே எங்களை␢ ஒரு பழிச்சொல்லாக்கினீர்;␢ ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத்␢ தலையசைத்து நகைக்கின்றனர்.⁾
15⁽எனக்குள்ள மானக்கேடு நாள் முழுதும்␢ என் கண்முன் நிற்கின்றது;␢ அவமானம் என் முகத்தை மூடியுள்ளது.⁾
24⁽நீர் உமது முகத்தை␢ ஏன் மறைத்துக் கொள்கின்றீர்?␢ எங்கள் சிறுமையையும் துன்பத்தையும்␢ ஏன் மறந்து விடுகின்றீர்?⁾
25⁽நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்;␢ எங்கள் உடல் மண்ணோடு␢ ஒட்டிக்கொண்டுள்ளது.⁾
Alleluia
மத்தேயு 4: 23
23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
Gospel
மாற்கு 1: 40-45
40ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.
41இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார்.
42உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
43❮43-44❯பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால், நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.
44Same as above
45ஆனால், அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும், மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.