ஜனவரி 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

15 ஜனவரி, 2028

Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary

Optional Memorial of the Blessed Virgin Mary
First Reading

1 சாமுவேல் 9: 1-4, 17-19; 10: 1

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 21: 2-3, 4-5, 6-7

2⁽அவர் உள்ளம் விரும்பியதை␢ நீர் அவருக்குத் தந்தருளினீர்;␢ அவர் வாய்விட்டுக் கேட்டதை␢ நீர் மறுக்கவில்லை. (சேலா)⁾ 3⁽உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி␢ நீர் அவரை எதிர்கொண்டீர்; § அவர் தலையில்␢ பசும்பொன்முடி சூட்டினீர்.⁾ 4⁽அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்;␢ நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை § அவருக்கு அளித்தீர்.⁾ 5⁽நீர் அவருக்கு வெற்றியளித்ததால்␢ அவரது மாட்சிமை பெரிதாயிற்று;␢ மேன்மையையும் மாண்பையும்␢ அவருக்கு அருளினீர்,⁾ 6⁽உண்மையாகவே,␢ எந்நாளும் நிலைத்திருக்கும்␢ ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;␢ உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன்␢ கண்டு களிக்கச் செய்தீர்.⁾ 7⁽ஏனெனில், அரசர் ஆண்டவரில்␢ நம்பிக்கை வைக்கின்றார்;␢ உன்னதரின் பேரன்பினால்␢ அவர் அசைவுறாதிருப்பார்.⁾
Alleluia

லூக்கா 4: 18

18⁽“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள்பொழிவு செய்துள்ளார்.␢ ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்␢ சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,␢ பார்வையற்றோர் பார்வைபெறுவர் என␢ முழக்கமிடவும்␢ ஒடுக்கப்பட்டோரை␢ விடுதலை செய்து அனுப்பவும்⁾
Gospel

மாற்கு 2: 13-17

13இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். 14பின்பு, அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். 15பின்பு, அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில், இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். 16அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர். 17இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.