பிப்ரவரி 2028

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
272829
இன்றுக்கு

வாசகங்கள்

28 பிப்ரவரி, 2028

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

1 பேதுரு 1: 3-9

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 111: 1-2, 5-6, 9 and 10c

1⁽அல்லேலூயா! நெஞ்சார␢ ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துவேன்;␢ நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும்␢ அவருக்கு நன்றி செலுத்துவேன்.⁾ 2⁽ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;␢ அவற்றில் இன்பம் காண்போர்␢ அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர்.⁾ 5⁽அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு␢ உணவு அளிக்கின்றார்;␢ தமது உடன்படிக்கையை␢ என்றும் நினைவில் கொள்கின்றார்;⁾ 6⁽வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத்␢ தம் மக்களுக்கு அளித்தார்;␢ இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை␢ அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.⁾ 9⁽தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;␢ தம் உடன்படிக்கை␢ என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;␢ அவரது திருப்பெயர் தூயது;␢ அஞ்சுதற்கு உரியது.⁾ 10⁽ஆண்டவர்பற்றிய அச்சமே␢ ஞானத்தின் தொடக்கம்;␢ அவர்தம் கட்டளைகளைக்␢ கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்;␢ அவரது புகழ்␢ என்றென்றும் நிலைத்துள்ளது.⁾
Alleluia

2 கொரிந்தியர் 8: 9

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மாற்கு 10: 17-27

17இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார். 18அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. 19உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ⁽‘கொலைசெய்யாதே; § விபசாரம் செய்யாதே; § களவு செய்யாதே; § பொய்ச்சான்று சொல்லாதே; § வஞ்சித்துப் பறிக்காதே; § உன் தாய் தந்தையை மதித்து நட’⁾” என்றார். 20அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார். 21அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். 22இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில், அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.⒫ 23இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். 24சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். 25அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார். 26சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 27இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.⒫