வாசகங்கள்
5 பிப்ரவரி, 2028
Agatha, Virgin, Martyr Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
1 அரசர்கள் 3: 4-13
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 119: 9, 10, 11, 12, 13, 14
9⁽இளைஞர் தம் நடத்தையை␢ மாசற்றதாய்க் காத்துக் கொள்வது␢ எவ்வாறு? உம் வாக்கைக்␢ கடைப்பிடிப்பதால் அன்றோ?⁾
10⁽முழுமனத்தோடு␢ நான் உம்மைத் தேடுகின்றேன்;␢ உம் கட்டளைகளைவிட்டு␢ என்னை விலகவிடாதேயும்.⁾
11⁽உமக்கெதிராய்␢ நான் பாவம் செய்யாதவாறு␢ உமது வாக்கை␢ என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.⁾
12⁽ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்;␢ எனக்கு உம் விதிமுறைகளைக்␢ கற்பித்தருளும்.⁾
13⁽உம் வாயினின்று வரும்␢ நீதித்தீர்ப்புகளை எல்லாம்␢ என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.⁾
14⁽பெருஞ்செல்வத்தில்␢ மகிழ்ச்சி அடைவதுபோல்,␢ நான் உம் ஒழுங்குமுறைகளின்படி␢ நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.⁾
Alleluia
யோவான் 10: 27
27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel
மாற்கு 6: 30-34
30திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.
31அவர் அவர்களிடம், “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
32அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
33அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
34அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.