ஜூன் 2026

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

5 ஜூன், 2026

Memorial of Saint Boniface, Bishop and Martyr

அன்றைய திருப்பலி
Reading I

2 திமொத்தேயு 3:10-17

10என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றைப் பின்பற்றிவந்திருக்கிறாய். 11அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார். 12கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். 13ஆனால், தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள். 14நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. 15நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. 16மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. 17இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 119:157, 160, 161, 165, 166, 168

157⁽என்னைக் கொடுமைப்படுத்துவோரும்␢ பகைப்போரும் பலர்;␢ ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு␢ நான் தவறுவதில்லை.⁾ 160⁽உண்மையே உமது வார்த்தையின்␢ உட்பொருள்;␢ நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம்␢ என்றும் நிலைத்துள்ளன.⁾ 161⁽தலைவர்கள் என்னைக் காரணமின்றிக்␢ கொடுமைப்படுத்துகின்றனர்;␢ ஆனால், உம் வாக்கை முன்னிட்டு␢ என் உள்ளம் நடுங்குகின்றது.⁾ 165⁽உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு␢ மிகுதியான நல்வாழ்வு உண்டு;␢ அவர்களை நிலைகுலையச் செய்வது␢ எதுவுமில்லை.⁾ 166⁽ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக␢ நான் காத்திருக்கின்றேன்;␢ உம் கட்டளைகளைச்␢ செயல்படுத்துகின்றேன்.⁾ 168⁽உம் நியமங்களையும்␢ ஒழுங்குமுறைகளையும்␢ நான் கடைப்பிடிக்கின்றேன்;␢ ஏனெனில், என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவை.⁾
Alleluia

யோவான் 14:23

23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.
Gospel

மாற்கு 12:35-37

35இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, “மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? 36தூய ஆவியின் தூண்டுதலால், ⁽‘ஆண்டவர் என் தலைவரிடம், § \"நான் உம் பகைவரை § உமக்கு அடிபணியவைக்கும்வரை § நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்\" ⁾ என்று உரைத்தார்’ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! 37தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?” என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.