ஜூன் 2026

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

4 ஜூன், 2026

Thursday of the Ninth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

2 திமொத்தேயு 2:8-15

8தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். 9இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால், கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. 10தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.⒫ 11பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது:⁽ ‘நாம் அவரோடு இறந்தால்,␢ அவரோடு வாழ்வோம்;⁾ 12⁽அவரோடு நிலைத்திருந்தால்,␢ அவரோடு ஆட்சிசெய்வோம்;␢ நாம் அவரை மறுதலித்தால்␢ அவர் நம்மை மறுதலிப்பார்.⁾ 13⁽நாம் நம்பத்தகாதவரெனினும்␢ அவர் நம்பத்தகுந்தவர்.␢ ஏனெனில் தம்மையே மறுதலிக்க␢ அவரால் இயலாது.’⁾ இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து. 14வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது; அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக் கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு. 15நீ கடவுள்முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்; உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 25:4-5, 8-9, 10 and 14

4⁽ஆண்டவரே, உம் பாதைகளை␢ நான் அறியச்செய்தருளும்;␢ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.⁾ 5⁽உமது உண்மை நெறியில்␢ என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;␢ ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;␢ உம்மையே நான் நாள் முழுவதும்␢ நம்பியிருக்கின்றேன்;⁾ 8⁽ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;␢ ஆகையால், அவர் பாவிகளுக்கு␢ நல்வழியைக் கற்பிக்கின்றார்.⁾ 9⁽எளியோரை நேரிய வழியில்␢ அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்␢ தமது வழியைக் கற்பிக்கின்றார்.⁾ 10⁽ஆண்டவரது உடன்படிக்கையையும்␢ ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,␢ அவருடைய பாதைகளெல்லாம்␢ பேரன்பும் உண்மையும்␢ உள்ளனவாய் விளங்கும்.⁾ 14⁽ஆண்டவரின் அன்புறவு அவருக்கு␢ அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்;␢ அவர் அவர்களுக்கு தமது␢ உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;⁾
Alleluia

2 திமொத்தேயு 1:10

10நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.⒫
Gospel

மாற்கு 12:28-34

28அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். 29❮29-30❯அதற்கு இயேசு, ⁽“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’⁾ என்பது முதன்மையான கட்டளை. 30Same as above 31⁽‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’⁾ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார். 32அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ⁽‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’⁾ என்று நீர் கூறியது உண்மையே. 33⁽அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்தவதும்⁾ எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது” என்று கூறினார். 34அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.