ஜூன் 2026

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

8 ஜூன், 2026

Monday of the Tenth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

1 அரசர்கள் 17:1-6

1கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், “நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது” என்றார். 2பின்னர், ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது; 3“இங்கிருந்து ஓடிவிடு; கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள். 4அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக் கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்”. 5அவ்வாறே, அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார். 6காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 121:1-2, 3-4, 5-6, 7-8

1⁽மலைகளை நோக்கி␢ என் கண்களை␢ உயர்த்துகின்றேன்!␢ எங்கிருந்து எனக்கு உதவி வரும்?⁾ 2⁽விண்ணையும் மண்ணையும் § உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே␢ எனக்கு உதவி வரும்.⁾ 3⁽அவர் உம் கால் இடறாதபடி␢ பார்த்துக் கொள்வார்;␢ உம்மைக் காக்கும் அவர்␢ உறங்கிவிடமாட்டார்.⁾ 4⁽இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர்␢ கண்ணயர்வதுமில்லை;␢ உறங்குவதும் இல்லை.⁾ 5⁽ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;␢ அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;␢ அவரே உமக்கு நிழல் ஆவார்!⁾ 6⁽பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;␢ இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.⁾ 7⁽ஆண்டவர் உம்மை␢ எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;␢ அவர் உம் உயிரைக் காத்திடுவார்.⁾ 8⁽நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்␢ இப்போதும் எப்போதும்␢ ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.⁾
Alleluia

மத்தேயு 5:12

12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
Gospel

மத்தேயு 5:1-12

1இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். 2அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: 3⁽“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு␢ அவர்களுக்கு உரியது.⁾ 4⁽துயருறுவோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.⁾ 5⁽கனிவுடையோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள்␢ நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.*⁾ 6⁽நீதிநிலைநாட்டும்␢ வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர்.⁾ 7⁽இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.⁾ 8⁽தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.⁾ 9⁽அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில் அவர்கள்␢ கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.⁾ 10⁽நீதியின் பொருட்டுத்␢ துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.⁾ 11என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! 12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.