ஜூலை 2026

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

9 ஜூலை, 2026

Thursday of the Fourteenth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

ஒசேயா 11:1-4, 8-9

1⁽இஸ்ரயேல் குழந்தையாய் இருந்த␢ போது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்;␢ எகிப்திலிருந்து என் மகனை␢ அழைத்து வந்தேன்.⁾ 2⁽எவ்வளவுக்கு நான் அவர்களை␢ வருந்தி அழைத்தேனோ,␢ அவ்வளவுக்கு என்னை விட்டுப்␢ பிடிவாதமாய் விலகிப் போனார்கள்;␢ பாகால்களுக்குப் பலியிட்டார்கள்,␢ சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.⁾ 3⁽ஆனால் எப்ராயிமுக்கு␢ நடைபயிற்றுவித்தது நானே;␢ அவர்களைக் கையிலேந்தியதும் நானே;␢ ஆயினும், அவர்களைக் குணமாக்கியது␢ நானே என்பதை␢ அவர்கள் உணராமற் போனார்கள்.⁾ 4⁽*பரிவு என்னும் கட்டுகளால்␢ அவர்களைப் பிணைத்து,␢ அன்புக் கயிறுகளால் கட்டி␢ நடத்தி வந்தேன்;␢ அவர்கள் கழுத்தின்மேல் இருந்த␢ நுகத்தை அகற்றினேன்;␢ அவர்கள் பக்கம் சாய்ந்து␢ உணவு ஊட்டினேன்.⁾ 8⁽எப்ராயிமே! நான் உன்னை␢ எப்படிக் கைவிடுவேன்?␢ இஸ்ரயேலே! உன்னை␢ எப்படிக் கைநெகிழ்வேன்?␢ உன்னை எப்படி␢ அதிமாவைப் போலாக்குவேன்?␢ செபோயிமுக்குச் செய்ததுபோல்␢ உனக்கும் செய்வேனோ?␢ என் உள்ளம் அதை␢ வெறுத்து ஒதுக்குகின்றது,␢ என் இரக்கம் பொங்கி வழிகின்றது.⁾ 9⁽என் சீற்றத்தின் கனலைக்␢ கொட்டமாட்டேன்;␢ எப்ராயிமை அழிக்கத்␢ திரும்பிவரமாட்டேன்;␢ நான் இறைவன், வெறும் மனிதனல்ல;␢ நானே உங்கள் நடுவிலிருக்கும்␢ தூயவர், ஆதலால், நான்␢ நகர்க்கு எதிராக வரமாட்டேன்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 80:2, 3, 15-16

2⁽எப்ராயிம், பென்யமின்,␢ மனாசேயின் முன்னிலையில்␢ உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து␢ எம்மை மீட்க வாரும்!⁾ 3⁽கடவுளே, எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾ 15⁽உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,␢ உமக்கென நீர் வளர்த்த மகவைக்␢ காத்தருளும்!⁾ 16⁽அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;␢ அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;␢ உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,␢ அவர்கள் அழிந்துபோவார்களாக!⁾
Alleluia

மாற்கு 1:15

15“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
Gospel

மத்தேயு 10:7-15

7அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். 8நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். 9பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம். 10பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில், வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. 11நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். 12அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். 13வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும். 14உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். 15தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.