வாசகங்கள்
4 ஜூலை, 2026
Saturday of the Thirteenth Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
ஆமோஸ் 9:11-15
11⁽“அந்நாள்களில்␢ விழுந்துகிடக்கும்␢ தாவீதின் கூடாரத்தை␢ மீண்டும் உயர்த்துவேன்.␢ அதிலுள்ள கிழிசல்களைப்␢ பழுதுபார்த்துச்␢ சிதைந்தவற்றைச் சீர்படுத்திப்␢ பண்டை நாளில் இருந்ததுபோல்␢ மீண்டும் கட்டியெழுப்புவேன்.⁾
12⁽அப்பொழுது,␢ ஏதோமில் எஞ்சியிருப்போரையும்␢ எனது பெயரைத் தாங்கியிருக்கும்␢ பிற இனத்தார் அனைவரையும்␢ அவர்கள் தங்கள்␢ உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,”␢ என்கிறார்␢ இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.⁾
13⁽“இதோ! நாள்கள் வரப்போகின்றன;␢ அப்போது,␢ அறுவடை செய்வோரை உழுவோரும்,␢ கனி பிழிவோரை விதைப்போரும்␢ தொடர்ந்து முன்னேறுவர்;␢ மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்;␢ குன்றுகள்தோறும்␢ அது வழிந்தோடும்,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾
14⁽“என் மக்களாகிய இஸ்ரயேலை␢ முன்னைய நன்னிலைக்குக்␢ கொண்டுவருவேன்;␢ அவர்கள் பாழடைந்த நகர்களைத்␢ திரும்பக் கட்டி␢ அவற்றில் குடியேறுவார்கள்;␢ திராட்சைத் தோட்டங்களை அமைத்து␢ அவற்றின் கனிரசத்தை␢ அருந்துவார்கள்.␢ பழத்தோட்டங்கள் அமைத்து␢ அவற்றின் கனிகளை உண்பார்கள்.⁾
15⁽அவர்களைத் தங்கள் நாட்டில்␢ மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்;␢ நான் அவர்களுக்கு அளித்திருக்கும்␢ நாட்டிலிருந்து␢ இனி ஒருபோதும் அவர்கள்␢ பிடுங்கப்படமாட்டார்கள்,” என்கிறார்␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 85:9 and 10, 11-12, 13-14
9⁽அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு␢ அவரது மீட்பு அண்மையில் உள்ளது␢ என்பது உறுதி; நம் நாட்டில்␢ அவரது மாட்சி குடிகொள்ளும்.⁾
10⁽பேரன்பும் உண்மையும்␢ ஒன்றையொன்று சந்திக்கும்;␢ நீதியும் நிறைவாழ்வும்␢ ஒன்றையொன்று முத்தமிடும்.⁾
11⁽மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;␢ விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.⁾
12⁽நல்லதையே ஆண்டவர் அருள்வார்;␢ நல்விளைவை நம்நாடு நல்கும்.⁾
13⁽நீதி அவர்முன் செல்லும்;␢ அவர்தம் அடிச்சுவடுகளுக்கு␢ வழி வகுக்கும்.⁾
Alleluia
யோவான் 10:27
27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel
மத்தேயு 9:14-17
14பின்பு, யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.
15அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
16மேலும், எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில், அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும்.
17அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா” என்றார்.