வாசகங்கள்
3 பிப்ரவரி, 2027
Ordinary Weekday/ Blase, Bishop, Martyr/ Ansgar, Bishop, Missionary
Ansgar, Bishop, Missionary
First Reading
எபிரேயர் 12: 4-7, 11-15
4பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
5தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: ⁽“பிள்ளாய், ஆண்டவர் உன்னைக்␢ கண்டித்துத் திருத்துவதை␢ வேண்டாம் எனத் தள்ளிவிடாதே.␢ அவர் கண்டிக்கும்போது␢ தளர்ந்து போகாதே.”⁾
6⁽“தந்தை தாம் ஏற்றுக்கொண்ட␢ மக்களைத் தண்டிக்கிறார்;␢ ஆண்டவர் தாம் யாரிடம்␢ அன்பு கொண்டிருக்கிறாரோ␢ அவர்களைக் கண்டிக்கிறார்.”⁾
7திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ?
11இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.
12எனவே,⁽“தளர்ந்துபோன கைகளைத்␢ திடப்படுத்துங்கள்,␢ தள்ளாடும் முழங்கால்களை␢ உறுதிப்படுத்துங்கள்.”⁾
13⁽“நீங்கள் நேர்மையான பாதையில்␢ நடந்து செல்லுங்கள்.”⁾ அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.
14அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார்.
15உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதபடியும் அதனால் பலர் கெட்டுப்போகாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 103: 1-2, 13-14, 17-18a
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் முழு உளமே!␢ அவரது திருப்பெயரை ஏத்திடு!⁾
2⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ அவருடைய கனிவான செயல்கள்␢ அனைத்தையும் மறவாதே!⁾
13⁽தந்தை தம் பிள்ளைகள்மீது␢ இரக்கம் காட்டுவதுபோல்␢ ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது␢ இரங்குகிறார்.⁾
14⁽அவர் நமது உருவத்தை அறிவார்;␢ நாம் தூசி என்பது␢ அவர் நினைவிலுள்ளது.⁾
17⁽ஆண்டவரது பேரன்போ␢ அவருக்கு அஞ்சுவோர்மீது␢ என்றென்றும் இருக்கும்;␢ அவரது நீதியோ␢ அவர்களின் பிள்ளைகளின்␢ பிள்ளைகள்மீதும் இருக்கும்.⁾
18⁽அவருடைய உடன்படிக்கையைக்␢ கடைப்பிடித்து␢ அவரது கட்டளையின்படி நடப்பதில்␢ கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.⁾
Alleluia
யோவான் 10: 27
27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel
மாற்கு 6: 1-6
1அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
2ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!
3இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
4இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார்.
5அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.
6[a]அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். ⒯[b]அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.