வாசகங்கள்
6 அக்டோபர், 2028
Ordinary Weekday/ Bruno, Priest, Hermit, Religious Founder/ Blessed Marie-Rose Durocher, Virgin, Religious Founder
Blessed Marie-Rose Durocher, Virgin, Religious Founder
First Reading
யோபு 38: 1, 12-21; 40: 3-5
1⁽ஆண்டவர் சூறாவளியினின்று␢ யோபுக்கு அருளிய பதில்:⁾
12⁽உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக்␢ கட்டளையிட்டதுண்டா?␢ வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா?⁾
13⁽இவ்வாறு, அது வையக விளிம்பைத்␢ தொட்டிழுத்து, பொல்லாதவரை␢ அதனுளிருந்து உதறித்தள்ளுமே!⁾
14⁽முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல்␢ மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.⁾
15⁽அப்போது, கொடியவரிடமிருந்து␢ ஒளி பறிக்கப்படும்;␢ அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.⁾
16⁽கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?␢ ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?⁾
17⁽சாவின் வாயில்கள்␢ உனக்குக் காட்டப்பட்டனவோ?␢ இருள் உலகின் கதவுகளைக்␢ கண்டதுண்டோ நீ?⁾
18⁽அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா?␢ அறிவிப்பாய் அதிலுள்ள␢ அனைத்தையும் அறிந்திருந்தால்!⁾
19⁽ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ!␢ இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?⁾
20⁽அதன் எல்லைக்கு␢ அதனை அழைத்துப் போவாயோ?␢ அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!⁾
21⁽ஆம், அறிவாய்;␢ அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்;␢ ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!⁾
3⁽யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:⁾
4₍இதோ! எளியேன் யான்␢ இயம்புதற்குண்டோ? என் வாயைக்␢ கையால் பொத்திக் கொள்வேன்.₎
5⁽ஒருமுறை பேசினேன்;␢ மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்;␢ இனிப் பேசவேமாட்டேன்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 139: 1-3, 7-8, 9-10, 13-14ab
1⁽ஆண்டவரே!␢ நீர் என்னை␢ ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!⁾
2⁽நான் அமர்வதையும் எழுவதையும்␢ நீர் அறிந்திருக்கின்றீர்;␢ என் நினைவுகளை எல்லாம்␢ தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.⁾
3⁽நான் நடப்பதையும் படுப்பதையும்␢ நீர் அறிந்துள்ளீர்;␢ என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவையே.⁾
7⁽உமது ஆற்றலைவிட்டு␢ நான் எங்கே செல்லக்கூடும்?␢ உமது திருமுன்னிலிருந்து␢ நான் எங்கே தப்பியோட முடியும்?⁾
8⁽நான் வானத்திற்கு␢ ஏறிச் சென்றாலும்␢ நீர் அங்கே இருக்கின்றீர்!␢ பாதாளத்தில் படுக்கையை␢ அமைத்துக் கொண்டாலும்␢ நீர் அங்கேயும் இருக்கின்றீர்!⁾
9⁽நான் *கதிரவனின் இடத்திற்கும்*␢ பறந்து சென்றாலும்␢ மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,⁾
10⁽அங்கேயும் உமது கை␢ என்னை நடத்திச் செல்லும்;␢ உமது வலக்கை என்னைப்␢ பற்றிக் கொள்ளும்.⁾
13⁽ஏனெனில், என் உள் உறுப்புகளை␢ உண்டாக்கியவர் நீரே!␢ என் தாயின் கருவில்␢ எனக்கு உருதந்தவர் நீரே!⁾
14⁽அஞ்சத்தகு, வியத்தகு முறையில்␢ நீர் என்னைப் படைத்ததால்,␢ நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;␢ உம் செயல்கள்␢ வியக்கத்தக்கவை என்பதை␢ என் மனம் முற்றிலும் அறியும்.⁾
Alleluia
திருப்பாடல்கள் 95: 8
8⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾
Gospel
லூக்கா 10: 13-16
13“கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர்.
14எனினும், தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.
15கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்.⒫
16“உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”