செப்டம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

8 செப்டம்பர், 2026

Feast of the Nativity of the Blessed Virgin Mary

அன்றைய திருப்பலி
Reading I

மீக்கா 5:1-4

1⁽அரண்சூழ் நகரில் வாழும் மக்களே!␢ உங்கள் மதில்களுக்குப் பின்னால்␢ ஒளிந்து கொள்ளுங்கள்;␢ உங்களுக்கு எதிராக␢ முற்றுகையிடப்பட்டுள்ளது;␢ இஸ்ரயேலின் ஆளுநன்␢ கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.⁾ 2⁽நீயோ, எப்ராத்தா எனப்படும்␢ பெத்லகேமே!␢ யூதாவின் குடும்பங்களுள்␢ மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!␢ ஆயினும், இஸ்ரயேலை␢ என் சார்பாக ஆளப் போகின்றவர்␢ உன்னிடமிருந்தே தோன்றுவார்;␢ அவர் தோன்றும் வழி மரபோ␢ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.⁾ 3⁽ஆதலால்,␢ பேறுகால வேதனையில் இருப்பவள்␢ பிள்ளை பெறும்வரை␢ அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்;␢ அதன் பின்னர்␢ அவருடைய இனத்தாருள்␢ எஞ்சியிருப்போர்␢ இஸ்ரயேல் மக்களிடம்␢ திரும்பி வருவார்கள்.⁾ 4⁽அவர் வரும்போது,␢ ஆண்டவரின் வலிமையோடும்␢ தம் கடவுளாகிய ஆண்டவரது␢ பெயரின் மாட்சியோடும் விளங்கித்␢ தம் மந்தையை மேய்ப்பார்;␢ அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்;␢ ஏனெனில், உலகின்␢ இறுதி எல்லைகள்வரை␢ அப்போது அவர்␢ மேன்மை பொருந்தியவராய்␢ விளங்குவார்;⁾
Reading I - Alternative

உரோமையர் 8:28-30

28மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். 29தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார். 30தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 13:6, 6

6⁽நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ நன்மை பல செய்துள்ளார்.⁾
Alleluia

:-

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 1:1-16, 18-23

1❮1-2❯⦅தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:⦆ ⁽ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;␢ ஈசாக்கின் மகன் யாக்கோபு;␢ யாக்கோபின் புதல்வர்கள்␢ யூதாவும் அவர் சகோதரர்களும்.⁾ 2Same as above 3⁽யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த␢ புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;␢ பெரேட்சின் மகன் எட்சரோன்;␢ எட்சரோனின் மகன் இராம்.*⁾ 4⁽இராமின் மகன் அம்மினதாபு;␢ அம்மினதாபின் மகன் நகசோன்;␢ நகசோனின் மகன் சல்மோன்.⁾ 5⁽சல்மோனுக்கும் இராகாபுக்கும்␢ பிறந்த மகன் போவாசு;␢ போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த␢ மகன் ஓபேது;␢ ஓபேதின் மகன் ஈசாய்.⁾ 6⁽ஈசாயின் மகன் தாவீது அரசர்;␢ தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்␢ பிறந்த மகன் சாலமோன்.⁾ 7⁽சாலமோனின் மகன் ரெகபயாம்;␢ ரெகபயாமின் மகன் அபியாம்;␢ அபியாமின் மகன் ஆசா.*⁾ 8⁽ஆசாவின் மகன் யோசபாத்து;␢ யோசபாத்தின் மகன் யோராம்;␢ யோராமின் மகன் உசியா.⁾ 9⁽உசியாவின் மகன் யோத்தாம்;␢ யோத்தாமின் மகன் ஆகாசு;␢ ஆகாசின் மகன் எசேக்கியா.⁾ 10⁽எசேக்கியாவின் மகன் மனாசே;␢ மனாசேயின் மகன் ஆமோன்;␢ ஆமோனின் மகன் யோசியா.⁾ 11⁽யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும்* அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.⁾ 12⁽பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.⁾ 13⁽செருபாபேலின் மகன் அபியூது;␢ அபியூதின் மகன் எலியாக்கிம்;␢ எலியாக்கிமின் மகன் அசோர்.⁾ 14⁽அசோரின் மகன் சாதோக்கு;␢ சாதோக்கின் மகன் ஆக்கிம்;␢ ஆக்கிமின் மகன் எலியூது.⁾ 15₍எலியூதின் மகன் எலயாசர்;␢ எலயாசரின் மகன் மாத்தான்;␢ மாத்தானின் மகன் யாக்கோபு.₎ 16⁽யாக்கோபின் மகன்␢ மரியாவின் கணவர் யோசேப்பு.␢ மரியாவிடம் பிறந்தவரே␢ கிறிஸ்து* என்னும் இயேசு.⁾ 18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார். 22❮22-23❯⦃“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”⦄ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். 23Same as above
Gospel - Alternative

மத்தேயு 1:18-23

18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார். 22❮22-23❯⦃“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”⦄ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். 23Same as above