வாசகங்கள்
29 செப்டம்பர், 2026
Feast of Saints Michael, Gabriel, and Raphael, Archangels
அன்றைய திருப்பலி
Reading I
தானியேல் 7:9-10, 13-14
9நான் பார்த்துக் கொண்டிருக்கையில்,⁽அரியணைகள் அமைக்கப்பட்டன;␢ தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்;␢ அவருடைய ஆடை வெண்பனி போலவும்,␢ அவரது தலைமுடி␢ தூய பஞ்சு போலவும் இருந்தன;␢ அவருடைய அரியணை␢ தீக்கொழுந்துகளாயும்␢ அதன் சக்கரங்கள்␢ எரி நெருப்பாயும் இருந்தன.⁾
10⁽அவர் முன்னிலையிலிருந்து␢ நெருப்பாலான ஓடை தோன்றிப்␢ பாய்ந்தோடி வந்தது;␢ பல்லாயிரம் பேர்␢ அவருக்குப் பணிபுரிந்தார்கள்.␢ பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்;␢ நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது;␢ நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.⁾⒫
13⁽இரவில் நான் கண்ட காட்சியாவது:␢ வானத்தின் மேகங்களின் மீது␢ மானிட மகனைப் போன்ற␢ ஒருவர் தோன்றினார்;␢ இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில்␢ அவர் வந்தார்;␢ அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.⁾
14⁽ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும்␢ அவருக்கு கொடுக்கப்பட்டன;␢ எல்லா இனத்தாரும்␢ நாட்டினரும் மொழியினரும்␢ அவரை வழிபட வேண்டும்;␢ அவரது ஆட்சியுரிமை␢ என்றுமுளதாகும்;␢ அதற்கு முடிவே இராது;␢ அவரது அரசு அழிந்து போகாது.⁾⒫
Reading I - Alternative
திருவெளிப்பாடு 12:7-12
7பின்னர், விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்.
8அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று.
9அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது; அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.⒫
10பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது:⁽“இதோ, மீட்பு, வல்லமை,␢ நம் கடவுளின் ஆட்சி,␢ அவருடைய மெசியாவின் அதிகாரம்␢ ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.␢ நம் சகோதரர் சகோதரிகள் மீது␢ குற்றம் சுமத்தியவன்,␢ நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும்␢ அவர்கள்மீது குற்றம் சாட்டியவன்␢ வெளியே தள்ளப்பட்டான்.⁾
11⁽ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும்␢ தாங்கள் பகர்ந்த சான்றாலும்␢ அவர்கள் அவனை வென்றார்கள்.␢ அவர்கள் தங்கள் உயிர்மீது␢ ஆசை வைக்கவில்லை;␢ இறக்கவும் தயங்கவில்லை.⁾
12⁽இதன்பொருட்டு விண்ணுலகே,␢ அதில் குடியிருப்போரே,␢ மகிழ்ந்து கொண்டாடுங்கள்.␢ மண்ணுலகே, கடலே,␢ ஐயோ! உங்களுக்குக் கேடு!␢ தனக்குச் சிறிது காலமே␢ எஞ்சியிருக்கிறது என்பதை␢ அலகை அறிந்துள்ளது;␢ அதனால் கடுஞ் சீற்றத்துடன்␢ உங்களிடம் வந்துள்ளது.”⁾⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 138:1-2, 2-3, 4-5
1⁽ஆண்டவரே!␢ என் முழுமனத்துடன்␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ தெய்வங்கள் முன்னிலையில்␢ உம்மைப் புகழ்வேன்.⁾
2⁽உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி␢ உம்மைத் தாள் பணிவேன்;␢ உம் பேரன்பையும்␢ உண்மையையும் முன்னிட்டு␢ உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;␢ ஏனெனில், அனைத்திற்கும் மேலாக␢ உம் பெயரையும் உம் வாக்கையும்␢ மேன்மையுறச் செய்துள்ளீர்.⁾
3⁽நான் மன்றாடிய நாளில்␢ எனக்குச் செவிசாய்த்தீர்;␢ என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.⁾
4⁽ஆண்டவரே! நீர்␢ திருவாய் மலர்ந்த சொற்களைப்␢ பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு␢ உம்மைப் போற்றுவர்.⁾
5⁽ஆண்டவரே! உம் வழிகளை␢ அவர்கள் புகழ்ந்து பாடுவர்;␢ ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!⁾
Alleluia
திருப்பாடல்கள் 103:21
21⁽ஆண்டவரின் படைகளே!␢ அவர் திருவுளப்படி நடக்கும்␢ அவர்தம் பணியாளரே!␢ அவரைப் போற்றுங்கள்.⁾
Gospel
யோவான் 1:47-51
47நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.
48நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.
49நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
50அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார்.
51மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.