செப்டம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

25 செப்டம்பர், 2026

Friday of the Twenty-fifth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

சபை உரையாளர் 3:1-11

1⁽ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு.␢ உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்␢ சிக்கும் ஒரு காலமுண்டு.⁾ 2⁽பிறப்புக்கு ஒரு காலம்,␢ இறப்புக்கு ஒரு காலம்;␢ நடவுக்கு ஒரு காலம்,␢ அறுவடைக்கு ஒரு காலம்;⁾ 3⁽கொல்லுதலுக்கு ஒரு காலம்,␢ குணப்படுத்தலுக்கு ஒரு காலம்;⁾ 4⁽இடித்தலுக்கு ஒரு காலம்,␢ கட்டுதலுக்கு ஒரு காலம்;␢ அழுகைக்கு ஒரு காலம்,␢ சிரிப்புக்கு ஒரு காலம்;␢ துயரப்படுதலுக்கு ஒரு காலம்,␢ துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்;⁾ 5⁽கற்களை எறிய ஒரு காலம்,␢ கற்களைச் சேர்க்க ஒரு காலம்;␢ அரவணைக்க ஒரு காலம்,␢ அரவணையாதிருக்க ஒரு காலம்;⁾ 6⁽தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம்,␢ இழப்பதற்கு ஒரு காலம்;␢ காக்க ஒரு காலம்,␢ தூக்கியெறிய ஒரு காலம்;⁾ 7⁽கிழிப்பதற்கு ஒரு காலம்,␢ தைப்பதற்கு ஒரு காலம்;␢ பேசுவதற்கு ஒரு காலம்,␢ பேசாதிருப்பதற்கு ஒரு காலம்;⁾ 8⁽அன்புக்கு ஒரு காலம்,␢ வெறுப்புக்கு ஒரு காலம்;␢ போருக்கு ஒரு காலம்,␢ அமைதிக்கு ஒரு காலம்.⁾⒫ 9வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? 10மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலை சுமையைக் கண்டேன். 11கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 144:1 and 2, 3-4

1⁽என் பாறையாகிய ஆண்டவர்␢ போற்றி! போற்றி!␢ போரிட என் கைகளுக்குப்␢ பயிற்சி அளிப்பவர் அவரே!␢ போர்புரிய என் விரல்களைப்␢ பழக்குபவரும் அவரே!⁾ 2⁽என் கற்பாறையும்* கோட்டையும் அவரே!␢ எனக்குப் பாதுகாப்பாளரும்␢ மீட்பரும் அவரே!␢ என் கேடயமும் புகலிடமும் அவரே!␢ மக்களினத்தாரை எனக்குக்␢ கீழ்ப்படுத்துபவர் அவரே!⁾ 3⁽ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க␢ அவர்கள் யார்?␢ மானிடரை நீர் கருத்தில் கொள்ள␢ அவர்கள் யார்?⁾ 4⁽மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்;␢ அவர்களின் வாழ்நாள்கள்␢ மறையும் நிழலுக்கு நிகரானவை.⁾
Alleluia

மாற்கு 10:45

45ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய* மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
Gospel

லூக்கா 9:18-22

18இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார். 19அவர்கள் மறுமொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள். 20“ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார். 21இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். 22மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.