டிசம்பர் 2026

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
இன்றுக்கு

வாசகங்கள்

28 டிசம்பர், 2026

Feast of the Holy Innocents, Martyrs

அன்றைய திருப்பலி
Reading I

1 யோவான் 1:5-2:2

5நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. 6நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவராவோம். 7மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும், அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். 8ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. 9மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். 10நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும். 1என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. 2நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 124:2-3, 4-5, 7-8

2⁽ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்,␢ நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,⁾ 3⁽அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது,␢ அவர்கள் நம்மை␢ உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.⁾ 4⁽அப்பொழுது, வெள்ளம்␢ நம்மை மூழ்கடித்திருக்கும்;␢ பெருவெள்ளம் நம்மீது␢ புரண்டோடியிருக்கும்;⁾ 5⁽கொந்தளிக்கும் வெள்ளம்␢ நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.⁾ 7⁽வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த␢ பறவைபோல் ஆனோம்;␢ கண்ணி அறுந்தது;␢ நாம் தப்பிப் பிழைத்தோம்.⁾ 8⁽ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!␢ விண்ணையும் மண்ணையும்␢ உண்டாக்கியவர் அவரே!⁾
Alleluia

:-

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 2:13-18

13அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார். 14யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். 15ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ⁽“எகிப்திலிருந்து என் மகனை␢ அழைத்து வந்தேன்”⁾ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. 16ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங்கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். 17❮17-18❯₍அப்பொழுது §“ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது;␢ ஒரே புலம்பலும் பேரழுகையுமாய்␢ இருக்கிறது;␢ இராகேல் தன் குழந்தைகளுக்காக␢ அழுதுகொண்டிருக்கிறார்;␢ ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்;␢ ஏனெனில் அவர் குழந்தைகள்␢ அவரோடு இல்லை”₎ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது. 18Same as above