வாசகங்கள்
22 மே, 2027
Ordinary Weekday/ Optional Memorial of the Blessed Virgin Mary/ Rita of Cascia, Religious
Rita of Cascia, Religious
First Reading
சீராக் 17: 1-15
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 103: 13-14, 15-16, 17-18
13⁽தந்தை தம் பிள்ளைகள்மீது␢ இரக்கம் காட்டுவதுபோல்␢ ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது␢ இரங்குகிறார்.⁾
14⁽அவர் நமது உருவத்தை அறிவார்;␢ நாம் தூசி என்பது␢ அவர் நினைவிலுள்ளது.⁾
15⁽மனிதரின் வாழ்நாள்␢ புல்லைப் போன்றது;␢ வயல்வெளிப் பூவென␢ அவர்கள் மலர்கின்றார்கள்.⁾
16⁽அதன்மீது காற்றடித்ததும்␢ அது இல்லாமல் போகின்றது;␢ அது இருந்த இடமே␢ தெரியாமல் போகின்றது.⁾
17⁽ஆண்டவரது பேரன்போ␢ அவருக்கு அஞ்சுவோர்மீது␢ என்றென்றும் இருக்கும்;␢ அவரது நீதியோ␢ அவர்களின் பிள்ளைகளின்␢ பிள்ளைகள்மீதும் இருக்கும்.⁾
18⁽அவருடைய உடன்படிக்கையைக்␢ கடைப்பிடித்து␢ அவரது கட்டளையின்படி நடப்பதில்␢ கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.⁾
Alleluia
மத்தேயு 11: 25
25அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
Gospel
மாற்கு 10: 13-16
13சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
14இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.
15இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
16பிறகு, அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.