வாசகங்கள்
7 ஜூன், 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
2 கொரிந்தியர் 1: 1-7
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 34: 2-3, 4-5, 6-7, 8-9
2⁽நான் ஆண்டவரைப் பற்றிப்␢ பெருமையாகப் பேசுவேன்;␢ எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.⁾
3⁽என்னுடன் ஆண்டவரை␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது பெயரை ஒருமிக்க␢ மேன்மைப்படுத்துவோம்.⁾
4⁽துணைவேண்டி நான் ஆண்டவரை␢ மன்றாடினேன்; அவர் எனக்கு␢ மறுமொழி பகர்ந்தார்;␢ எல்லா வகையான அச்சத்தினின்றும்␢ அவர் என்னை விடுவித்தார்.⁾
5⁽அவரை நோக்கிப் பார்த்தோர்␢ மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;␢ அவர்கள் முகம்␢ அவமானத்திற்கு உள்ளாகவில்லை.⁾
6⁽இந்த ஏழை கூவியழைத்தான்;␢ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;␢ அவர் எல்லா நெருக்கடியினின்றும்␢ அவனை விடுவித்துக் காத்தார்.⁾
7⁽ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை␢ அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.⁾
8⁽ஆண்டவர் எத்துணை இனியவர் என்று␢ சுவைத்துப் பாருங்கள்;␢ அவரிடம் அடைக்கலம் புகுவோர்␢ பேறுபெற்றோர்.⁾
9⁽ஆண்டவரின் தூயோரே,␢ அவருக்கு அஞ்சுங்கள்;␢ அவருக்கு அஞ்சுவோர்க்கு␢ எக்குறையும் இராது.⁾
Alleluia
மத்தேயு 5: 12a
12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
Gospel
மத்தேயு 5: 1-12
1இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
2அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
3⁽“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு␢ அவர்களுக்கு உரியது.⁾
4⁽துயருறுவோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.⁾
5⁽கனிவுடையோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள்␢ நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.*⁾
6⁽நீதிநிலைநாட்டும்␢ வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர்.⁾
7⁽இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.⁾
8⁽தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.⁾
9⁽அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;␢ ஏனெனில் அவர்கள்␢ கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.⁾
10⁽நீதியின் பொருட்டுத்␢ துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.⁾
11என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.