வாசகங்கள்
3 டிசம்பர், 2027
Francis Xavier, Priest, Missionary Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 29: 17-24
17⁽இன்னும் சிறிது காலத்தில் லெபனோன்␢ வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ?␢ வளம் மிகு நிலம்␢ காடாக ஆகிவிடுமன்றோ?⁾
18⁽அந்நாளில் காது கேளாதோர்␢ ஏட்டுச் சுருளின்␢ வார்த்தைகளைக் கேட்பர்;␢ பார்வையற்றோரின் கண்கள்␢ காரிருளிலிருந்தும் மையிருளிலிருந்தும்␢ விடுதலையாகிப் பார்வை பெறும்.⁾
19⁽ஒடுக்கப்பட்டோர் மீண்டும்␢ ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்;␢ மானிடரில் வறியவர்␢ இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.⁾
20⁽கொடியோர் இல்லாதொழிவர்;␢ இகழ்வோர் இல்லாமற் போவர்;␢ தீமையில் நாட்டம் கொள்வோர்␢ அழிந்து போவர்.⁾
21⁽அவர்கள் ஒருவர்மேல்␢ பொய்க் குற்றம் சாட்டி,␢ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை␢ இடறச் செய்கின்றனர்;␢ பொய் புனைந்து நேர்மையாளரின்␢ வழக்கைப் புரட்டுகின்றனர்.⁾
22⁽ஆதலால்␢ ஆபிராகாமை மீட்ட ஆண்டவர்␢ யாக்கோபு வீட்டாரைப் பற்றிக் கூறுவது:␢ இனி யாக்கோபு␢ மானக்கேடு அடைவதில்லை;␢ அவன் முகம் இனி␢ வெளிறிப் போவதுமில்லை.⁾
23⁽அவன் பிள்ளைகள் என் பெயரைத்␢ தூயதெனப் போற்றுவர்;␢ நான் செய்யவிருக்கும் என்␢ கைவேலைப்பாடுகளைக் காணும்போது␢ யாக்கோபின் தூயவரைத்␢ தூயவராகப் போற்றுவர்;␢ இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர்.⁾
24⁽தவறிழைக்கும் சிந்தை கொண்டோர்␢ உணர்வடைவர்; முறுமுறுப்போர்␢ அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 27: 1, 4, 13-14
1⁽ஆண்டவரே என் ஒளி;␢ அவரே என் மீட்பு;␢ யாருக்கு நான் அஞ்சவேண்டும்?␢ ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;␢ யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?⁾
4⁽நான் ஆண்டவரிடம்␢ ஒரு விண்ணப்பம் செய்தேன்;␢ அதையே நான் நாடித் தேடுவேன்;␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ என் வாழ்நாள் எல்லாம்␢ நான் குடியிருக்க வேண்டும்,␢ ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; § அவரது கோவிலில் அவரது␢ திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.⁾
13⁽வாழ்வோரின் நாட்டினிலே␢ ஆண்டவரின் நலன்களைக்␢ காண்பேன் என்று␢ நான் இன்னும் நம்புகின்றேன்.⁾
14⁽நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;␢ மன உறுதிகொள்;␢ உன் உள்ளம் வலிமை பெறட்டும்;␢ ஆண்டவருக்காகக் காத்திரு.⁾
Gospel
மத்தேயு 9: 27-31
27இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்.
28அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள்.
29பின்பு, அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார்.
30உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.
31ஆனால், அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.