வாசகங்கள்
13 டிசம்பர், 2027
Lucy, Virgin, Martyr Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
எண்ணிக்கை 24: 2-7, 15-17
2பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.
3⁽அவர் திருஉரையாகக் கூறியது:␢ “பெகோர் புதல்வன் பிலயாமின்␢ திருமொழி!␢ கண் திறக்கப்பட்டவனின்␢ திருமொழி!⁾
4⁽கடவுளின் வார்த்தைகளைக்␢ கேட்கிறவனின்,␢ பேராற்றல் வாய்ந்தவரின்␢ காட்சியைக் கண்டு கீழே விழுந்தும்␢ கண் மூடாதவனின் திருமொழி!⁾
5⁽யாக்கோபே! உன் கூடாரங்களும்␢ இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும்␢ எத்துணை அழகு வாய்ந்தவை!⁾
6⁽அவை விரிந்து கிடக்கும்␢ பள்ளத்தாக்குகள் போன்றவை;␢ ஆண்டவர் நட்ட அகில் மரங்கள்␢ போன்றவை; நீர் அருகிலுள்ள␢ கேதுரு மரங்கள் போன்றவை.⁾
7⁽அவனுடைய நீர்க்கால்களிலிருந்து␢ தண்ணீர் ஓடும்; அவனது விதை␢ நீர்த்திரளின்மேல் இருக்கும்;␢ அவனுடைய அரசன்␢ ஆகாகைவிடப் பெரியவன்;␢ அவனது அரசு உயர்த்தப்படும்.⁾
15⁽அவர் திரு உரையாகக் கூறியது:␢ “பெகோரின் புதல்வன் பிலயாமின்␢ திருமொழி! கண்␢ திறக்கப்பட்டவனின் திருமொழி!⁾
16⁽கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு,␢ உன்னதர் அளித்த அறிவைப் பெற்று␢ பேராற்றலுடையவரின் காட்சி கண்டு␢ கீழே வீழ்ந்தும் கண்␢ மூடப்படாதவனின் திருமொழி!⁾
17⁽நான் அவரைக் காண்பேன்;␢ ஆனால், இப்போதன்று;␢ நான் அவரைப் பார்ப்பேன்;␢ ஆனால் அண்மையிலன்று;␢ யாக்கோபிலிருந்து விண்மீன்␢ ஒன்று உதிக்கும்!␢ இஸ்ரயேலிலிருந்து செங்கோல்␢ ஒன்று எழும்பும்!␢ அது மோவாபின் நெற்றிப்␢ பிறையை நசுக்கும்;␢ சேத்தின் புதல்வர்␢ அனைவரையும் அழித்துவிடும்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 25: 4-5ab, 6 and 7bc, 8-9
4⁽ஆண்டவரே, உம் பாதைகளை␢ நான் அறியச்செய்தருளும்;␢ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.⁾
5⁽உமது உண்மை நெறியில்␢ என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;␢ ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;␢ உம்மையே நான் நாள் முழுவதும்␢ நம்பியிருக்கின்றேன்;⁾
6⁽ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,␢ உமது பேரன்பையும் நினைந்தருளும்;␢ ஏனெனில், அவை␢ தொடக்கமுதல் உள்ளவையே.⁾
7⁽என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,␢ என் குற்றங்களையும் நினையாதேயும்,␢ உமது பேரன்பிற்கேற்ப␢ என்னை நினைத்தருளும்;␢ ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.⁾
8⁽ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;␢ ஆகையால், அவர் பாவிகளுக்கு␢ நல்வழியைக் கற்பிக்கின்றார்.⁾
9⁽எளியோரை நேரிய வழியில்␢ அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்␢ தமது வழியைக் கற்பிக்கின்றார்.⁾
Alleluia
திருப்பாடல்கள் 85: 8
8⁽ஆண்டவராம் இறைவன்␢ உரைப்பதைக் கேட்பேன்;␢ தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு␢ நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;␢ அவர்களோ மடமைக்குத்␢ திரும்பிச் செல்லலாகாது.⁾
Gospel
மத்தேயு 21: 23-27
23இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள்.
24இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.
25யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?” என்று அவர் கேட்டார். அவர்கள் “‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார்.
26‘மனிதரிடமிருந்து’ என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில், அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
27எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம் “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.