வாசகங்கள்
7 டிசம்பர், 2027
Ambrose, Bishop, Doctor Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 40: 1-11
1⁽“ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக்␢ கனிமொழி கூறுங்கள்” என்கிறார்␢ உங்கள் கடவுள்.⁾
2⁽எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி,␢ உரத்த குரலில்␢ அவளுக்குச் சொல்லுங்கள்;␢ அவள் போராட்டம் நின்றுவிட்டது;␢ அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது;␢ அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும்␢ ஆண்டவர் கையில்␢ இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.⁾
3⁽குரலொலி ஒன்று முழங்குகின்றது;␢ பாலைநிலத்தில் ஆண்டவருக்காக␢ வழியை ஆயத்தமாக்குங்கள்;␢ பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக␢ நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.⁾
4⁽பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்;␢ மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்;␢ கோணலானது நேராக்கப்படும்;␢ கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.⁾
5⁽ஆண்டவரின் மாட்சி␢ வெளிப்படுத்தப்படும்;␢ மானிடர் அனைவரும்␢ ஒருங்கே இதைக் காண்பர்;␢ ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.⁾
6⁽“உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்;␢ “எதை நான்␢ உரக்கக் கூற வேண்டும்?” என்றேன்.␢ “மானிடர் அனைவரும் புல்லே ஆவர்;␢ அவர்களின் மேன்மை␢ வயல்வெளிப் பூவே!⁾
7⁽ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே,␢ புல் உலர்ந்துபோம்; பூ வதங்கிவிழும்;␢ உண்மையில் மானிடர் புல்லே ஆவர்!⁾
8⁽புல் உலர்ந்துபோம்; பூ வதங்கி விழும்;␢ நம் ஆண்டவரின் வார்த்தையோ␢ என்றென்றும் நிலைத்திருக்கும்.⁾
9⁽சீயோனே! நற்செய்தி தருபவளே,␢ உயர்மலைமேல் நின்றுகொள்!␢ எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே!␢ உன் குரலை எழுப்பு, அஞ்சாதே!␢ ‘இதோ உன் கடவுள்’ என்று␢ யூதா நகர்களிடம் முழங்கு!⁾
10⁽இதோ என் தலைவராகிய ஆண்டவர்␢ ஆற்றலுடன் வருகின்றார்;␢ அவர் ஆற்றலோடு␢ ஆட்சி புரிய இருக்கிறார்.␢ அவர்தம் வெற்றிப் பரிசைத்␢ தம்முடன் எடுத்து வருகின்றார்;␢ அவர் வென்றவை␢ அவர்முன் செல்கின்றன.⁾
11⁽ஆயனைப்போல் தம் மந்தையை␢ அவர் மேய்ப்பார்;␢ ஆட்டுக்குட்டிகளைத்␢ தம் கையால் ஒன்று சேர்ப்பார்;␢ அவற்றைத் தம் தோளில்␢ தூக்கிச் சுமப்பார்;␢ சினையாடுகளைக்␢ கவனத்துடன் நடத்திச் செல்வார்.”⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 96: 1-2, 3 and 10ac, 11-12, 13
1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;⁾
2⁽ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;␢ அவர் பெயரை வாழ்த்துங்கள்;␢ அவர் தரும் மீட்பை␢ நாள்தோறும் அறிவியுங்கள்.⁾
3⁽பிற இனத்தார்க்கு␢ அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;␢ அனைத்து மக்களினங்களுக்கும்␢ அவர்தம் வியத்தகு செயல்களை § அறிவியுங்கள்.⁾
10⁽வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;␢ ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகு உறுதியாக␢ நிலைநிறுத்தப்பட்டுள்ளது;␢ அது அசைவுறாது;␢ அவர் மக்களினங்களை␢ நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.⁾
11⁽விண்ணுலகம் மகிழ்வதாக;␢ மண்ணுலகம் களிகூர்வதாக;␢ கடலும் அதில் நிறைந்துள்ளனவும்␢ முழங்கட்டும்.⁾
12⁽வயல்வெளியும் அதில் உள்ள␢ அனைத்தும் களிகூரட்டும்;␢ அப்பொழுது, காட்டில் உள்ள␢ அனைத்து மரங்களும்␢ அவர் திருமுன் களிப்புடன் பாடும்.⁾
13⁽ஏனெனில் அவர் வருகின்றார்;␢ மண்ணுலகிற்கு␢ நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;␢ நிலவுலகை நீதியுடனும்␢ மக்களினங்களை உண்மையுடனும்␢ அவர் தீர்ப்பிடுவார்.⁾
Gospel
மத்தேயு 18: 12-14
12இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?
13அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.