ஜூலை 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

26 ஜூலை, 2028

Joachim and Anne, Parents of the Virgin Mary Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

எரேமியா 1: 1, 4-10

1பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்: 4⁽எனக்கு அருளப்பட்ட␢ ஆண்டவரின் வாக்கு:⁾ 5⁽“தாய் வயிற்றில் உன்னை நான்␢ உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்;␢ நீ பிறக்குமுன்பே உன்னைத்␢ திருநிலைப்படுத்தினேன்;␢ மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக␢ உன்னை ஏற்படுத்தினேன்.”⁾ 6⁽நான், “என் தலைவராகிய ஆண்டவரே,␢ எனக்குப் பேசத் தெரியாதே,␢ சிறுபிள்ளைதானே” என்றேன்.⁾ 7⁽ஆண்டவர் என்னிடம் கூறியது:␢ “‘சிறுபிள்ளை நான்’␢ என்று சொல்லாதே;␢ யாரிடமெல்லாம் உன்னை␢ அனுப்புகின்றேனோ␢ அவர்களிடம் செல்;␢ எவற்றை எல்லாம் சொல்லக்␢ கட்டளை இடுகின்றேனோ␢ அவற்றைச் சொல்.⁾ 8⁽அவர்கள்முன் அஞ்சாதே.␢ ஏனெனில், உன்னை விடுவிக்க␢ நான் உன்னோடு இருக்கின்றேன்,␢ என்கிறார் ஆண்டவர்.”⁾ 9⁽ஆண்டவர் தம் கையை நீட்டி␢ என் வாயைத் தொட்டு␢ என்னிடம் கூறியது:␢ “இதோ பார்! என் சொற்களை␢ உன் வாயில் வைத்துள்ளேன்.⁾ 10⁽பிடுங்கவும் தகர்க்கவும்,␢ அழிக்கவும் கவிழ்க்கவும்,␢ கட்டவும் நடவும்,␢ இன்று நான் உன்னை␢ மக்களினங்கள் மேலும்}␢ அரசுகள் மேலும்␢ பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்”.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 71: 1-2, 3-4a, 5-6ab, 15 and 17

1⁽ஆண்டவரே! உம்மிடம் நான்␢ அடைக்கலம் புகுந்துள்ளேன்;␢ ஒருபோதும் நான் வெட்கமுற␢ விடாதேயும்.⁾ 2⁽உமது நீதிக்கேற்ப␢ என்னை விடுவித்தருளும்;␢ எனக்கு நீர் செவிசாய்த்து␢ என்னை மீட்டுக் கொள்ளும்.⁾ 3⁽என் அடைக்கலப் பாறையாக␢ நீர் இருந்தருளும்;␢ கோட்டை அரணாயிருந்து␢ என்னை மீட்டருளும்;␢ ஏனெனில், நீர் எனக்குக்␢ கற்பாறையாகவும்␢ அரணாகவும் இருக்கின்றீர்.⁾ 4⁽என் கடவுளே, பொல்லார் கையினின்று␢ என்னைக் காத்தருளும்;␢ நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர்␢ பிடியினின்று என்னைக் காத்தருளும்.⁾ 5⁽என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;␢ ஆண்டவரே, இளமைமுதல்␢ நீரே என் நம்பிக்கை.⁾ 6⁽பிறப்பிலிருந்து நான் உம்மைச்␢ சார்ந்துள்ளேன்;␢ தாய் வயிற்றிலிருந்து␢ நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;␢ உம்மையே நான் எப்போதும்␢ புகழ்ந்து போற்றுவேன்.⁾ 15⁽என் வாய் நாள்தோறும்␢ உமது நீதியையும் நீர் அருளும்␢ மீட்பையும் எடுத்துரைக்கும்;␢ உம் அருட் செயல்களை␢ என்னால் கணிக்க இயலாது.⁾ 17⁽கடவுளே, என் இளமைமுதல்␢ எனக்குக் கற்பித்து வந்தீர்;␢ இனிவரும் நாள்களிலும்␢ உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.⁾
Gospel

மத்தேயு 13: 1-9

1அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். 2மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். 3அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். 4அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. 5வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; 6ஆனால், கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின. 7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. 8ஆனால், இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. 9கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.