வாசகங்கள்
16 நவம்பர், 2027
Ordinary Weekday/ Margaret of Scotland, Married Woman/ Gertrude the Great, Virgin, Religious
Gertrude the Great, Virgin, Religious
First Reading
2 மக்கபேயர் 6: 18-31
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 3: 2-3, 4-5, 6-7
2⁽‛கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’␢ என்று என்னைக் குறித்துச்␢ சொல்வோர் பலர். (சேலா)⁾
3⁽ஆயினும், ஆண்டவரே,␢ நீரே எனைக் காக்கும் கேடயம்;␢ நீரே என் மாட்சி; என்னைத்␢ தலைநிமிரச் செய்பவரும் நீரே.⁾
4⁽நான் உரத்த குரலில்␢ ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்;␢ அவர் தமது திருமலையிலிருந்து␢ எனக்குப் பதிலளிப்பார். (சேலா)⁾
5⁽நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;␢ ஏனெனில்,␢ ஆண்டவரே எனக்கு ஆதரவு.⁾
6⁽என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம்␢ பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.⁾
7⁽ஆண்டவரே, எழுந்தருளும்;␢ என் கடவுளே, என்னை மீட்டருளும்;␢ என் எதிரிகள் அனைவரையும்␢ கன்னத்தில் அறையும்!␢ பொல்லாரின் பல்லை உடையும்!⁾
Alleluia
1 யோவான் 4: 10b
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
லூக்கா 19: 1-10
1இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.
2அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.
3இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.
4அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.
5இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.
6அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.
7இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர்.
8சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்.
9இயேசு அவரை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில், இவரும் ஆபிரகாமின் மகனே!
10இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.