வாசகங்கள்
29 நவம்பர், 2027
Advent Weekday
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 2: 1-5
1⁽யூதாவையும் எருசலேமையும் குறித்து␢ ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட␢ காட்சி:⁾
2⁽இறுதி நாள்களில் ஆண்டவரின்␢ கோவில் அமைந்துள்ள மலை␢ எல்லா மலைகளுக்குள்ளும்␢ உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்;␢ எல்லாக் குன்றுகளுக்குள்ளும்␢ மேலாய் உயர்த்தப்படும்;␢ மக்களினங்கள் அதைநோக்கிச்␢ சாரை சாரையாய் வருவார்கள்.⁾
3⁽வேற்றினத்தார் பலர்␢ அங்கு வந்து சேர்ந்து␢ ‘புறப்படுங்கள்␢ ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;␢ யாக்கோபின் கடவுளின்␢ கோவிலுக்குப் போவோம்.␢ அவர் தம் வழிகளை␢ நமக்குக் கற்பிப்பார்;␢ நாமும் அவர் நெறிகளில்␢ நடப்போம்’ என்பார்கள்.␢ ஏனெனில், சீயோனிலிருந்தே␢ திருச்சட்டம் வெளிவரும்;␢ எருசலேமிலிருந்தே␢ ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.⁾
4⁽அவர் வேற்றினத்தாரிடையே உள்ள␢ வழக்குகளைத் தீர்த்து வைப்பார்;␢ பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்;␢ அவர்கள் தங்கள் வாள்களைக்␢ கலப்பைக் கொழுக்களாகவும்␢ தங்கள் ஈட்டிகளைக்␢ கருக்கரிவாள்களாகவும்␢ அடித்துக் கொள்வார்கள்,␢ ஓர் இனத்திற்கு எதிராக␢ மற்றோர் இனம் வாள் எடுக்காது;␢ அவர்கள் இனி ஒருபோதும்␢ போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.⁾
5⁽யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள்␢ நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்;⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 122: 1-2, 3-4b, 4cd-5, 6-7, 8-9
1⁽“ஆண்டவரது இல்லத்திற்குப்␢ போவோம்”, என்ற அழைப்பை␢ நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.⁾
2⁽எருசலேமே! இதோ,␢ நாங்கள் அடியெடுத்து வைத்து␢ உன் வாயில்களில் நிற்கின்றோம்.⁾
3⁽எருசலேம் செம்மையாக␢ ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.⁾
4⁽ஆண்டவரின் திருக்குலத்தார்␢ அங்கே செல்கின்றனர்;␢ இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட␢ கட்டளைக்களுக்கிணங்க␢ ஆண்டவரது பெயருக்கு அவர்கள்␢ நன்றி செலுத்தச் செல்வார்கள்.⁾
5⁽அங்கே நீதி வழங்க␢ அரியணைகள் இருக்கின்றன.␢ அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.⁾
6⁽எருசலேமில்␢ சமாதானம் நிலைத்திருக்கும்படி␢ வேண்டிக்கொள்ளுங்கள்;␢ “உன்னை விரும்புவோர்␢ வளமுடன் வாழ்வார்களாக!⁾
7⁽உன் கோட்டைகளுக்குள்␢ அமைதி நிலவுவதாக!␢ உம் மாளிகைகளில்␢ நல்வாழ்வு இருப்பதாக!⁾
8⁽உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று␢ நான் என் சகோதரர் சார்பிலும்␢ என் நண்பர் சார்பிலும்␢ உன்னை வாழ்த்துகின்றேன்.⁾
9⁽நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம்␢ இங்கே இருப்பதால், உன்னில்␢ நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.⁾
Alleluia
திருப்பாடல்கள் 80: 4
4⁽படைகளின் கடவுளாம் ஆண்டவரே!␢ உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக␢ எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?⁾
Gospel
மத்தேயு 8: 5-11
5இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.
6“ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார்.
7இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.
8நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
9நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.
10இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.
11கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.