நவம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
இன்றுக்கு

வாசகங்கள்

15 நவம்பர், 2027

Ordinary Weekday/ Albert the Great, Bishop, Religious, Doctor

Albert the Great, Bishop, Religious, Doctor
First Reading

1 மக்கபேயர் 1: 10-15, 41-43, 54-57, 62-63

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 119: 53, 61, 134, 150, 155, 158

53⁽உம் திருச்சட்டத்தைக் கைவிடும்␢ தீயோரைப் பார்க்கும்போது␢ சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது.⁾ 61⁽தீயோரின் கட்டுகள்␢ என்னை இறுக்குகின்றன;␢ ஆயினும், உம் திருச்சட்டத்தை␢ நான் மறவேன்.⁾ 134⁽மனிதர் செய்யும் கொடுமையினின்று␢ என்னை விடுவியும்!␢ உம் நியமங்களை நான்␢ கடைப்பிடிப்பேன்.⁾ 150⁽சதிசெய்து ஒடுக்குவோர்␢ என்னை நெருங்கி வருகின்றனர்;␢ உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும்␢ வெகு தொலைவு.⁾ 155⁽தீயோர்க்கு மீட்பு␢ வெகு தொலைவில் உள்ளது;␢ ஏனெனில், அவர்கள்␢ உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.⁾ 158⁽துரோகம் செய்வோரை␢ அருவருப்புடன் பார்க்கின்றேன்;␢ ஏனெனில், அவர்கள்␢ உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.⁾
Alleluia

யோவான் 8: 12

12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.
Gospel

லூக்கா 18: 35-43

35இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். 36மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார். 37நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள். 38உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார். 39முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார். 40இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும், 41“நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார். 42இயேசு அவரிடம், “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். 43அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.