வாசகங்கள்
3 ஜனவரி, 2027
Epiphany of the Lord Solemnity
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 60: 1-6
1⁽எழு! ஒளிவீசு! உன் ஒளி␢ தோன்றியுள்ளது.␢ ஆண்டவரின் மாட்சி␢ உன்மேல் உதித்துள்ளது!⁾
2⁽இதோ! இருள் பூவுலகை மூடும்;␢ காரிருள் மக்களினங்களைக் கவ்வும்;␢ ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்;␢ அவரது மாட்சி உன்மீது தோன்றும்!⁾
3⁽பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்;␢ மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி␢ நடைபோடுவர்.⁾
4⁽உன் கண்களை உயர்த்தி␢ உன்னைச் சுற்றிலும் பார்;␢ அவர்கள் அனைவரும் ஒருங்கே␢ திரண்டு உன்னிடம் வருகின்றனர்;␢ தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்;␢ உன் புதல்வியர்␢ தோளில் தூக்கி வரப்படுவர்.⁾
5⁽அப்பொழுது, நீ அதைக் கண்டு␢ அகமகிழ்வாய்;␢ உன் இதயம் வியந்து விம்மும்;␢ கடலின் திரள் செல்வம்␢ உன்னிடம் கொணரப்படும்;␢ பிற இனத்தாரின் சொத்துகள்␢ உன்னை வந்தடையும்.⁾
6⁽ஒட்டகங்களின் பெருந்திரள்␢ உன்னை நிரப்பும்;␢ மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின்␢ இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்;␢ இளம் நாட்டினர் யாவரும்␢ பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர்.␢ அவர்கள் ஆண்டவரின் புகழை␢ எடுத்துரைப்பர்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 72: 1-2, 7-8, 10-11, 12-13
1⁽கடவுளே, அரசருக்கு உமது␢ நீதித்தீர்ப்பை வழங்கும்␢ ஆற்றலை அளியும்;␢ அரச மைந்தரிடம்␢ உமது நீதி விளங்கச் செய்யும்.⁾
2⁽அவர் உம் மக்களை␢ நீதியோடு ஆள்வாராக!␢ உம்முடையவரான எளியோர்க்கு␢ நீதித்தீர்ப்பு வழங்குவாராக!⁾
7⁽அவர் காலத்தில்␢ நீதி தழைத்தோங்குவதாக;␢ நிலா உள்ள வரையில்␢ மிகுந்த சமாதானம் நிலவுவதாக.⁾
8⁽ஒரு கடலிலிருந்து␢ அடுத்த கடல்வரைக்கும்␢ அவர் ஆட்சி செலுத்துவார்;␢ பேராற்றிலிருந்து␢ உலகின் எல்லை வரைக்கும்␢ அவர் அரசாள்வார்.⁾
10⁽தர்சீசு அரசர்களும்␢ தீவுகளின் அரசர்களும்␢ காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;␢ சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள்␢ நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.⁾
11⁽எல்லா அரசர்களும் அவர்முன்␢ தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்;␢ எல்லா இனத்தவரும்␢ அவருக்கு ஊழியம் செய்வார்கள்.⁾
12⁽தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும்␢ திக்கற்ற எளியோரையும்␢ அவர் விடுவிப்பார்.⁾
13⁽வறியோர்க்கும் ஏழைகட்கும்␢ அவர் இரக்கம் காட்டுவார்;␢ ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.⁾
Second Reading
எபேசியர் 3: 2-3a, 5-6
2உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
3அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப்பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
5அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
6நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.⒫
Alleluia
மத்தேயு 2: 2
2“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.
Gospel
மத்தேயு 2: 1-12
1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,
2“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.
3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.
4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.
5❮5-6❯அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ⁽‘யூதா நாட்டுப் பெத்லகேமே,␢ யூதாவின் ஆட்சி மையங்களில்␢ நீ சிறியதே இல்லை; ஏனெனில்,␢ என் மக்களாகிய இஸ்ரயேலை␢ ஆயரென ஆள்பவர் ஒருவர்␢ உன்னிலிருந்தே தோன்றுவார்’⁾ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.
6Same as above
7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.
8மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.