வாசகங்கள்
10 ஜனவரி, 2027
Baptism of the Lord Feast
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 55: 1-11
1⁽தாகமாய் இருப்பவர்களே,␢ நீங்கள் அனைவரும்␢ நீர்நிலைகளுக்கு வாருங்கள்;␢ கையில் பணமில்லாதவர்களே,␢ நீங்களும் வாருங்கள்;␢ தானியத்தை வாங்கி உண்ணுங்கள்,␢ வாருங்கள், காசு பணமின்றித்␢ திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.⁾
2⁽உணவாக இல்லாத ஒன்றிற்காக␢ நீங்கள் ஏன் பணத்தைச்␢ செலவிடுகின்றீர்கள்?␢ நிறைவு தராத ஒன்றிற்காய்␢ ஏன் உங்கள் உழைப்பை␢ வீணாக்குகிறீர்கள்?␢ எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்;␢ நல்லுணவை உண்ணுங்கள்;␢ கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.⁾
3⁽எனக்குச் செவிகொடுங்கள்,␢ என்னிடம் வாருங்கள்;␢ கேளுங்கள்; அப்பொழுது␢ நீங்கள் வாழ்வடைவீர்கள்.␢ நான் உங்களுடன் ஓர்␢ என்றுமுள உடன்படிக்கையைச்␢ செய்து கொள்வேன்;␢ தாவீதுக்கு நான் காட்டிய␢ மாறாத பேரன்பை␢ உங்களுக்கும் காட்டுவேன்.⁾
4⁽நான் அவனை␢ மக்களினங்களுக்குச் சாட்சியாகவும்,␢ வேற்றினங்களுக்குத் தலைவராகவும்␢ தளபதியாகவும் ஏற்படுத்தினேன்.⁾
5⁽இதோ, நீ அறியாத␢ பிற இனமக்களை அழைப்பாய்;␢ உன் கடவுளாகிய ஆண்டவரை,␢ இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு,␢ உன்னை அறியாத பிறஇனத்தார்␢ உன்னிடம் ஓடிவருவர்.␢ ஏனெனில், அவர் உன்னை␢ மேன்மைப்படுத்தியுள்ளார்.⁾
6⁽ஆண்டவரைக் காண்பதற்கு␢ வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்;␢ அவர் அண்மையில் இருக்கும்போதே␢ அவரை நோக்கி மன்றாடுங்கள்.⁾
7⁽கொடியவர் தம் வழிமுறையையும்,␢ தீயவர் தம் எண்ணங்களையும்␢ விட்டுவிடுவார்களாக;␢ அவர்கள் ஆண்டவரிடம்␢ திரும்பி வரட்டும்; அவர்␢ அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்;␢ அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்;␢ ஏனெனில், மன்னிப்பதில்␢ அவர் தாராள மனத்தினர்.⁾
8⁽என் எண்ணங்கள்␢ உங்கள் எண்ணங்கள் அல்ல,␢ உங்கள் வழிமுறைகள்␢ என் வழிமுறைகள் அல்ல,␢ என்கிறார் ஆண்டவர்.⁾
9⁽மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம்␢ மிக உயர்ந்து இருப்பதுபோல␢ உங்கள் வழிமுறைகளைவிட␢ என் வழிமுறைகளும்,␢ உங்கள் எண்ணங்களைவிட␢ என் எண்ணங்களும்␢ மிக உயர்ந்திருக்கின்றன.⁾
10⁽மழையும் பனியும்␢ வானத்திலிருந்து இறங்கி வருகின்றன;␢ அவை நிலத்தை நனைத்து,␢ முளை அரும்பி வளரச் செய்து,␢ விதைப்பவனுக்கு விதையையும்␢ உண்பவனுக்கு உணவையும்␢ கொடுக்காமல்,␢ அங்குத் திரும்பிச் செல்வதில்லை.⁾
11⁽அவ்வாறே, என் வாயிலிருந்து␢ புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்.␢ அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி,␢ எதற்காக நான் அதை அனுப்பினேனோ␢ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல்␢ வெறுமையாய் என்னிடம்␢ திரும்பி வருவதில்லை.⁾
Responsorial Psalm
எசாயா 12: 2-3, 4bcd, 5-6
2⁽இறைவன் என் மீட்பர்,␢ அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்,␢ நான் அஞ்சமாட்டேன்;␢ ஆண்டவரே என் ஆற்றல்,␢ அவரையே பாடுவேன்,␢ என் மீட்பும் அவரே.”⁾
3⁽மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள்␢ அகமகிழ்வோடு தண்ணீர்␢ முகந்து கொள்வீர்கள்.⁾
4⁽அந்நாளில் நீங்கள் சொல்வதாவது:␢ ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;␢ அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;␢ மக்களினங்களிடையே␢ அவர்செயல்களை அறிவியுங்கள்;␢ அவர் திருப்பெயர் உயர்க எனப்␢ பறைசாற்றுங்கள்.⁾
5⁽ஆண்டவருக்குப் புகழ்ப்பா␢ அமைத்துப் பாடுங்கள்;␢ ஏனெனில் அவர் மாட்சியுறும்␢ செயல்களைப் புரிந்துள்ளார்;␢ அனைத்துலகும் இதை␢ அறிந்துகொள்வதாக.⁾
6⁽சீயோனில் குடியிருப்போரே!␢ ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்;␢ இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே␢ சிறந்து விளங்குகின்றார்.⁾
Second Reading
1 யோவான் 5: 1-9
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
யோவான் 1: 29
29மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
Gospel
மாற்கு 1: 7-11
7அவர் தொடர்ந்து, “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.
8நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறைசாற்றினார்.
9அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
10அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.
11அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.