வாசகங்கள்
22 ஜனவரி, 2027
Day of Prayer for the Legal Protection of Unborn Children Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
எபிரேயர் 8: 6-13
6ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப்பணியை விட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார். ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது.⒫
7முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது.
8ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிச் சொன்னது இதுவே: ⁽“இதோ, நாள்கள் வருகின்றன.␢ அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும்␢ யூதாவின் வீட்டாரோடும்␢ புதிய உன்படிக்கை ஒன்றைச்␢ செய்து கொள்வேன்”⁾ என்கிறார் ஆண்டவர்.
9⁽“எகிப்து நாட்டிலிருந்து␢ அவர்களுடைய மூதாதையரைக்␢ கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது␢ நான் அவர்களோடு␢ செய்துகொண்ட உடன்படிக்கையைப்␢ போன்று இது இராது.␢ ஏனெனில், நான் அவர்களோடு␢ செய்துகொண்ட உடன்படிக்கையை␢ அவர்கள் மீறிவிட்டார்கள்;␢ நானும் அவர்கள் மீது␢ அக்கறை கொள்ளவில்லை”⁾ என்கிறார் ஆண்டவர்.
10⁽“அந்நாள்களுக்குப் பின்␢ இஸ்ரயேல் வீட்டாரோடு␢ நான் செய்யவிருக்கும்␢ உடன்படிக்கை இதுவே:␢ என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்;␢ அதை அவர்களது இதயத்தில்␢ எழுதி வைப்பேன்.␢ நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்;␢ அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்”⁾ என்கிறார் ஆண்டவர்.
11⁽இனிமேல் எவரும்␢ “ஆண்டவரை அறிந்து கொள்ளும்” எனத்␢ தம் அடுத்தவருக்கோ,␢ சகோதரர் சகோதரிகளுக்கோ␢ கற்றுத் தர மாட்டார்.␢ ஏனெனில், அவர்களுள்␢ பெரியோர் முதல் சிறியோர்வரை␢ அனைவரும் என்னை அறிந்துகொள்வர்.⁾
12⁽அவர்களது தீச்செயலை நான்␢ இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன்.␢ அவர்களுடைய பாவங்களை␢ இனிமேல் நினைவுகூர மாட்டேன்.”⁾⒫
13“புதியதோர் உடன்படிக்கை” என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறையவேண்டியதே.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 85: 8 and 10, 11-12, 13-14
8⁽ஆண்டவராம் இறைவன்␢ உரைப்பதைக் கேட்பேன்;␢ தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு␢ நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;␢ அவர்களோ மடமைக்குத்␢ திரும்பிச் செல்லலாகாது.⁾
10⁽பேரன்பும் உண்மையும்␢ ஒன்றையொன்று சந்திக்கும்;␢ நீதியும் நிறைவாழ்வும்␢ ஒன்றையொன்று முத்தமிடும்.⁾
11⁽மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;␢ விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.⁾
12⁽நல்லதையே ஆண்டவர் அருள்வார்;␢ நல்விளைவை நம்நாடு நல்கும்.⁾
13⁽நீதி அவர்முன் செல்லும்;␢ அவர்தம் அடிச்சுவடுகளுக்கு␢ வழி வகுக்கும்.⁾
Gospel
மாற்கு 3: 13-19
13அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.
14தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;
15அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
16அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,
17செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் — இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் —
18அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன்,
19இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.