வாசகங்கள்
14 ஜனவரி, 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
எபிரேயர் 3: 7-14
7எனவே, தூய ஆவியார் கூறுவது:⁽“இன்று நீங்கள் அவரது குரலைக்␢ கேட்பீர்களென்றால்,⁾
8⁽பாலை நிலத்தில் சோதனை நாளன்று␢ கிளர்ச்சியின்போது இருந்ததுபோல,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾
9⁽அங்கே உங்கள் மூதாதையர்␢ நாற்பது ஆண்டுகள்␢ என் செயல்களைக் கண்டிருந்தும்␢ என்னைச் சோதித்துப் பார்த்தனர்.⁾
10⁽எனவே, அத்தலைமுறையினர் மீது␢ வெறுப்புக்கொண்டு,␢ ‘எப்போதும் இவர்களது உள்ளம்␢ தவறுகிறது;␢ என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்;␢ எனவே நான் சினமுற்று,⁾
11⁽“நான் அளிக்கும்␢ இளைப்பாற்றியின் நாட்டிற்குள்␢ நுழையவே மாட்டார்கள்” என்று␢ ஆணையிட்டுக் கூறினேன்’␢ என்றார் கடவுள்.”⁾§
12அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
13உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் “இன்றே” என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.
14தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 95: 6-7c, 8-9, 10-11
6⁽வாருங்கள்; தாள்பணிந்து␢ அவரைத் தொழுவோம்;␢ நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன்␢ முழந்தாளிடுவோம்.⁾
7⁽அவரே நம் கடவுள்;␢ நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;␢ நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.␢ இன்று நீங்கள் அவரது குரலுக்குச்␢ செவிகொடுத்தால் எத்துணை நலம்!⁾
8⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾
9⁽அங்கே உங்கள் மூதாதையர்␢ என்னைச் சோதித்தனர்;␢ என் செயல்களைக் கண்டிருந்தும்␢ என்னைச் சோதித்துப் பார்த்தனர்.⁾
10⁽நாற்பது ஆண்டளவாய்␢ அந்தத் தலைமுறை␢ எனக்கு வெறுப்பூட்டியதால்,␢ நான் உரைத்தது: ‛அவர்கள்␢ உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்;␢ என் வழிகளை அறியாதவர்கள்’.⁾
11⁽எனவே, நான் சினமுற்று,␢ ‛நான் அளிக்கும்␢ இளைப்பாற்றியின் நாட்டிற்குள்␢ நுழையவே மாட்டார்கள்’ என்று␢ ஆணையிட்டுக் கூறினேன்.⁾
Alleluia
மத்தேயு 4: 23
23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
Gospel
மாற்கு 1: 40-45
40ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.
41இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார்.
42உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
43❮43-44❯பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால், நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.
44Same as above
45ஆனால், அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும், மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.