செப்டம்பர் 2027

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

12 செப்டம்பர், 2027

Twenty-Fourth Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
First Reading

எசாயா 50: 5-9a

5⁽ஆண்டவராகிய என் தலைவர்␢ என் செவியைத் திறந்துள்ளார்;␢ நான் கிளர்ந்தெழவில்லை;␢ விலகிச் செல்லவுமில்லை.⁾ 6⁽அடிப்போர்க்கு என் முதுகையும்,␢ தாடியைப் பிடுங்குவோர்க்கு␢ என் தாடையையும் ஒப்புவித்தேன்.␢ நிந்தனை செய்வோர்க்கும்␢ காறி உமிழ்வோர்க்கும்␢ என் முகத்தை மறைக்கவில்லை.⁾ 7⁽ஆண்டவராகிய என் தலைவர்␢ துணை நிற்கின்றார்;␢ நான் அவமானம் அடையேன்;␢ என் முகத்தைக் கற்பாறை␢ ஆக்கிக் கொண்டேன்;␢ இழிநிலையை நான் அடைவதில்லை␢ என்றறிவேன்.⁾ 8⁽நான் குற்றமற்றவன் என எனக்குத்␢ தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்;␢ என்னோடு வழக்காடுபவன் எவன்?␢ நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்;␢ என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்?␢ அவன் என்னை நெருங்கட்டும்.⁾ 9⁽இதோ, ஆண்டவராகிய என் தலைவர்␢ எனக்குத் துணைநிற்கின்றார்;␢ நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட␢ யாரால் இயலும்?␢ அவர்கள் அனைவரும் துணியைப் போல்␢ இற்றுப்போவார்கள்;␢ புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 116: 1-2, 3-4, 5-6, 8-9

1⁽அல்லேலூயா! ஆண்டவர்மீது␢ அன்புகூர்கின்றேன்;␢ ஏனெனில், எனக்கு இரங்குமாறு␢ நான் எழுப்பிய குரலை␢ அவர் கேட்டருளினார்.⁾ 2⁽அவரை நான் மன்றாடிய நாளில்,␢ எனக்கு அவர் செவிசாய்த்தார்.⁾ 3⁽சாவின் கயிறுகள்␢ என்னைப் பிணித்துக் கொண்டன;␢ பாதாளத்தின் துன்பங்கள்␢ என்னைப் பற்றிக் கொண்டன;␢ துன்பமும் துயரமும்␢ என்னை ஆட்கொண்டன.⁾ 4⁽நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்;␢ ‛ஆண்டவரே! என் உயிரைக்␢ காத்தருளும்’ என்று கெஞ்சினேன்.⁾ 5⁽ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்;␢ நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.⁾ 6⁽எளிய மனத்தோரை␢ ஆண்டவர் பாதுகாக்கின்றார்;␢ நான் தாழ்த்தப்பட்டபோது␢ எனக்கு மீட்பளித்தார்.⁾ 8⁽என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;␢ என் கண் கலங்காதபடியும்␢ என் கால் இடறாதபடியும் செய்தார்.⁾ 9⁽உயிர் வாழ்வோர் நாட்டில், நான்␢ ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.⁾
Second Reading

யாக்கோபு 2: 14-18

14என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? 15❮15-16❯ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? 16Same as above 17அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.⒫ 18ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.
Alleluia

கலாத்தியர் 6: 14

14நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.
Gospel

மாற்கு 8: 27-35

27இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். 28அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள். 29“ஆனால், நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார். 30தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். 31“மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். 32இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். 33ஆனால், இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார்.⒫ 34பின்பு, அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். 35ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.