யோபு 39

முந்திய அடுத்த
1⁽வரையாடு ஈனும் பருவம் தெரியுமோ?␢ மான்குட்டியை ஈனுதலைப்␢ பார்த்தது உண்டா?⁾ 2⁽எண்ணமுடியுமா␢ அவை சினையாயிருக்கும் மாதத்தை?␢ கணிக்க முடியுமா␢ அவை ஈனுகின்ற காலத்தை?,⁾ 3⁽குனிந்து குட்டிகளை அவை தள்ளும்;␢ வேதனையில் அவற்றை வெளியேற்றும்.⁾ 4⁽வெட்ட வெளியில் குட்டிகள் வளர்ந்து␢ வலிமைபெறும்; விட்டுப் பிரியும்;␢ அவைகளிடம் மீண்டும் வராது.⁾ 5⁽காட்டுக் கழுதையைக்␢ கட்டற்று திரியச் செய்தவர் யார்?␢ கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?⁾ 6⁽பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்;␢ உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.⁾ 7⁽நகர அமளியை அது நகைக்கும்;␢ ஓட்டுவோன் அதட்டலுக்கும் செவிகொடாது.⁾ 8⁽குன்றுகள் எங்கும் தேடும் மேய்ச்சலை;␢ பசுமை அனைத்தையும் நாடி அலையும்.⁾ 9⁽காட்டெருமை உனக்கு ஊழியம் செய்ய விரும்புமா?␢ உன் தொழுவத்தில் ஓர் இரவேனும் தங்குமா?⁾ 10⁽காட்டெருமையைக் கலப்பையில் பூட்டி␢ உழுதிடுவாயோ? பள்ளத்தாக்கில் பரம்படிக்க␢ அது உன் பின்னே வருமோ?⁾ 11⁽அது மிகுந்த வலிமை கொண்டதால்␢ அதனை நம்பியிருப்பாயோ?␢ எனவே, உன் வேலையை␢ அதனிடம் விடுவாயோ?⁾ 12⁽அது திரும்பி வரும் என நீ நம்புவாயோ?␢ உன் களத்திலிருந்து␢ தானியத்தைக் கொணருமோ?⁾ 13⁽தீக்கோழி சிறகடித்து நகைத்திடும்;␢ ஆனால், அதன் இறக்கையிலும்␢ சிறகுகளிலும் இரக்கம் உண்டோ?⁾ 14⁽ஏனெனில், மண்மேலே␢ அது தன் முட்டையை இடும்;␢ புழுதிமேல் பொரிக்க விட்டுவிடும்.⁾ 15⁽காலடி பட்டு அவை நொறுங்குமென்றோ␢ காட்டு விலங்கு அவைகளை மிதிக்குமென்றோ␢ அது நினைக்கவில்லை.⁾ 16⁽தன்னுடையவை அல்லாதன போன்று␢ தன் குஞ்சுகளைக் கொடுமையாய் நடத்தும்;␢ தன் வேதனை வீணாயிற்று␢ என்று கூடப் பதறாமல்போம்.⁾ 17⁽கடவுள் அதை மதிமறக்கச் செய்தார்;␢ அறிவினில் பங்கு அளித்தார் இல்லை.⁾ 18⁽விரித்துச் சிறகடித்து எழும்பொழுது,␢ பரியோடு அதன் வீரனையும் பரிகசிக்குமே!⁾ 19⁽குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ?␢ அதன் கழுத்தைப் பிடரியால்␢ உடுத்தியது நீயோ?⁾ 20⁽அதனைத் தத்துக்கிளிபோல்␢ தாவச் செய்வது நீயோ?␢ அதன் செருக்குமிகு கனைப்பு␢ நடுங்க வைத்திடுமே?⁾ 21⁽அது மண்ணைப் பறிக்கும்;␢ தன் வலிமையில் மகிழும்␢ போர்க்களத்தைச் சந்திக்கப்␢ புறப்பட்டுச் செல்லும்.⁾ 22⁽அது அச்சத்தை எள்ளி நகையாடும்;␢ அசையாது;␢ வாள் முனைக்கண்டு பின்வாங்காது.⁾ 23⁽அதன்மேல்␢ அம்பறாத் தூணி கலகலக்கும்;␢ ஈட்டியும் வேலும் பளபளக்கும்;⁾ 24⁽அது துள்ளும்; பொங்கி எழும்;␢ மண்ணை விழுங்கும்;␢ ஊதுகொம்பு ஓசையில் ஓய்ந்து நிற்காது;⁾ 25⁽எக்காளம் முழங்கும்போதெல்லாம்␢ “ஐஇ” என்னும்; தளபதிகளின்␢ இடி முழக்கத்தையும் இரைச்சலையும்␢ அப்பால் போரினையும்␢ இப்பாலே மோப்பம் பிடிக்கும்.⁾ 26⁽உன் அறிவினாலா வல்லூறு␢ பாய்ந்து இறங்குகின்றது?␢ தெற்கு நோக்கி␢ இறக்கையை விரிக்கின்றது?⁾ 27⁽உனது கட்டளையாலா␢ கழுகு பறந்து ஏறுகின்றது?␢ உயர்ந்த இடத்தில்␢ தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது?⁾ 28⁽பாறை உச்சியில்␢ கூடுகட்டித் தங்குகின்றது;␢ செங்குத்துப் பாறையை␢ அரணாகக் கொண்டுள்ளது.⁾ 29⁽அங்கிருந்தே அது கூர்ந்து␢ இரையைப் பார்க்கும்;␢ தொலையிலிருந்தே அதன் கண்கள்␢ அதைக் காணும்.⁾ 30⁽குருதியை உறிஞ்சும் அதன் குஞ்சுகள்;␢ எங்கே பிணமுண்டோ␢ அங்கே அது இருக்கும்.⁾