1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் முழு உளமே!␢ அவரது திருப்பெயரை ஏத்திடு!⁾
2⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ அவருடைய கனிவான செயல்கள்␢ அனைத்தையும் மறவாதே!⁾
3⁽அவர் உன் குற்றங்களையெல்லாம்␢ மன்னிக்கின்றார்;␢ உன் நோய்களையெல்லாம்␢ குணமாக்குகின்றார்.⁾
4⁽அவர் உன் உயிரைப்␢ படுகுழியினின்று மீட்கின்றார்;␢ அவர் உனக்குப்␢ பேரன்பையும் இரக்கத்தையும்␢ மணிமுடியாகச் சூட்டுகின்றார்.⁾
5⁽அவர் உன் வாழ்நாளை நலன்களால்␢ நிறைவுறச் செய்கின்றார்;␢ உன் இளமை கழுகின் இளமையெனப்␢ புதிதாய்ப் பொலிவுறும்.⁾
6⁽ஆண்டவரின் செயல்கள் நீதியானவை;␢ ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும்␢ அவர் உரிமைகளை வழங்குகின்றார்.⁾
7⁽அவர் தம் வழிகளை␢ மோசேக்கு வெளிப்படுத்தினார்;␢ அவர் தம் செயல்களை␢ இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்.⁾
8⁽ஆண்டவர் இரக்கமும் அருளும்␢ கொண்டவர்;␢ நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.⁾
9⁽அவர் எப்பொழுதும்␢ கடிந்து கொள்பவரல்லர்;␢ என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.⁾
10⁽அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப␢ நம்மை நடத்துவதில்லை;␢ நம் குற்றங்களுக்கு ஏற்ப␢ நம்மைத் தண்டிப்பதில்லை.⁾
11⁽அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்␢ காட்டும் பேரன்பு␢ மண்ணினின்று விண்ணளவு போன்று␢ உயர்ந்தது.⁾
12⁽மேற்கினின்று கிழக்கு␢ எத்துணைத் தொலைவிலுள்ளதோ,␢ அத்துணைத் தொலைவிற்கு␢ நம் குற்றங்களை நம்மிடமிருந்து␢ அவர் அகற்றுகின்றார்.⁾
13⁽தந்தை தம் பிள்ளைகள்மீது␢ இரக்கம் காட்டுவதுபோல்␢ ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது␢ இரங்குகிறார்.⁾
14⁽அவர் நமது உருவத்தை அறிவார்;␢ நாம் தூசி என்பது␢ அவர் நினைவிலுள்ளது.⁾
15⁽மனிதரின் வாழ்நாள்␢ புல்லைப் போன்றது;␢ வயல்வெளிப் பூவென␢ அவர்கள் மலர்கின்றார்கள்.⁾
16⁽அதன்மீது காற்றடித்ததும்␢ அது இல்லாமல் போகின்றது;␢ அது இருந்த இடமே␢ தெரியாமல் போகின்றது.⁾
17⁽ஆண்டவரது பேரன்போ␢ அவருக்கு அஞ்சுவோர்மீது␢ என்றென்றும் இருக்கும்;␢ அவரது நீதியோ␢ அவர்களின் பிள்ளைகளின்␢ பிள்ளைகள்மீதும் இருக்கும்.⁾
18⁽அவருடைய உடன்படிக்கையைக்␢ கடைப்பிடித்து␢ அவரது கட்டளையின்படி நடப்பதில்␢ கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.⁾
19⁽ஆண்டவர் தமது அரியணையை␢ விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்;␢ அவரது அரசு␢ அனைத்தின்மீதும் பரவியுள்ளது.⁾
20⁽அவர்தம் சொற்கேட்டு நடக்கும்␢ வலிமைமிக்கோரே!␢ ஆண்டவரின் தூதர்களே!␢ அவரைப் போற்றுங்கள்.⁾
21⁽ஆண்டவரின் படைகளே!␢ அவர் திருவுளப்படி நடக்கும்␢ அவர்தம் பணியாளரே!␢ அவரைப் போற்றுங்கள்.⁾
22⁽ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும்␢ அனைத்துப் படைப்புகளே!␢ ஆண்டவரைப் போற்றுங்கள்!␢ என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!⁾