திருப்பாடல்கள் 103

முந்திய அடுத்த
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் முழு உளமே!␢ அவரது திருப்பெயரை ஏத்திடு!⁾ 2⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ அவருடைய கனிவான செயல்கள்␢ அனைத்தையும் மறவாதே!⁾ 3⁽அவர் உன் குற்றங்களையெல்லாம்␢ மன்னிக்கின்றார்;␢ உன் நோய்களையெல்லாம்␢ குணமாக்குகின்றார்.⁾ 4⁽அவர் உன் உயிரைப்␢ படுகுழியினின்று மீட்கின்றார்;␢ அவர் உனக்குப்␢ பேரன்பையும் இரக்கத்தையும்␢ மணிமுடியாகச் சூட்டுகின்றார்.⁾ 5⁽அவர் உன் வாழ்நாளை நலன்களால்␢ நிறைவுறச் செய்கின்றார்;␢ உன் இளமை கழுகின் இளமையெனப்␢ புதிதாய்ப் பொலிவுறும்.⁾ 6⁽ஆண்டவரின் செயல்கள் நீதியானவை;␢ ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும்␢ அவர் உரிமைகளை வழங்குகின்றார்.⁾ 7⁽அவர் தம் வழிகளை␢ மோசேக்கு வெளிப்படுத்தினார்;␢ அவர் தம் செயல்களை␢ இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்.⁾ 8⁽ஆண்டவர் இரக்கமும் அருளும்␢ கொண்டவர்;␢ நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.⁾ 9⁽அவர் எப்பொழுதும்␢ கடிந்து கொள்பவரல்லர்;␢ என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.⁾ 10⁽அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப␢ நம்மை நடத்துவதில்லை;␢ நம் குற்றங்களுக்கு ஏற்ப␢ நம்மைத் தண்டிப்பதில்லை.⁾ 11⁽அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்␢ காட்டும் பேரன்பு␢ மண்ணினின்று விண்ணளவு போன்று␢ உயர்ந்தது.⁾ 12⁽மேற்கினின்று கிழக்கு␢ எத்துணைத் தொலைவிலுள்ளதோ,␢ அத்துணைத் தொலைவிற்கு␢ நம் குற்றங்களை நம்மிடமிருந்து␢ அவர் அகற்றுகின்றார்.⁾ 13⁽தந்தை தம் பிள்ளைகள்மீது␢ இரக்கம் காட்டுவதுபோல்␢ ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது␢ இரங்குகிறார்.⁾ 14⁽அவர் நமது உருவத்தை அறிவார்;␢ நாம் தூசி என்பது␢ அவர் நினைவிலுள்ளது.⁾ 15⁽மனிதரின் வாழ்நாள்␢ புல்லைப் போன்றது;␢ வயல்வெளிப் பூவென␢ அவர்கள் மலர்கின்றார்கள்.⁾ 16⁽அதன்மீது காற்றடித்ததும்␢ அது இல்லாமல் போகின்றது;␢ அது இருந்த இடமே␢ தெரியாமல் போகின்றது.⁾ 17⁽ஆண்டவரது பேரன்போ␢ அவருக்கு அஞ்சுவோர்மீது␢ என்றென்றும் இருக்கும்;␢ அவரது நீதியோ␢ அவர்களின் பிள்ளைகளின்␢ பிள்ளைகள்மீதும் இருக்கும்.⁾ 18⁽அவருடைய உடன்படிக்கையைக்␢ கடைப்பிடித்து␢ அவரது கட்டளையின்படி நடப்பதில்␢ கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.⁾ 19⁽ஆண்டவர் தமது அரியணையை␢ விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்;␢ அவரது அரசு␢ அனைத்தின்மீதும் பரவியுள்ளது.⁾ 20⁽அவர்தம் சொற்கேட்டு நடக்கும்␢ வலிமைமிக்கோரே!␢ ஆண்டவரின் தூதர்களே!␢ அவரைப் போற்றுங்கள்.⁾ 21⁽ஆண்டவரின் படைகளே!␢ அவர் திருவுளப்படி நடக்கும்␢ அவர்தம் பணியாளரே!␢ அவரைப் போற்றுங்கள்.⁾ 22⁽ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும்␢ அனைத்துப் படைப்புகளே!␢ ஆண்டவரைப் போற்றுங்கள்!␢ என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!⁾