திருப்பாடல்கள் 36

முந்திய அடுத்த
1⁽*பொல்லாரின் உள்ளத்தில்*␢ தீமையின் குரல்␢ ஒலித்துக் கொண்டே இருக்கின்றது;␢ அவர்களின் மனக்கண்களில்␢ இறையச்சம் இல்லை.⁾ 2⁽ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு␢ வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என,␢ இறுமாந்து தமக்குத்தாமே␢ பெருமை பாராட்டிக் கொள்கின்றனர்.⁾ 3⁽அவர்கள் வாயின் சொற்கள்␢ தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை;␢ நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை␢ அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர்.⁾ 4⁽படுக்கையில் கிடக்கையில் அவர்கள்␢ சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர்,␢ தகாத வழியை␢ உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்;␢ தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை.⁾ 5⁽ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது␢ உமது பேரன்பு;␢ முகில்களைத் தொடுகின்றது␢ உமது வாக்குப் பிறழாமை.⁾ 6⁽ஆண்டவரே, உமது நீதி␢ இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது;␢ உம் தீர்ப்புகள் கடல்போல்␢ ஆழமானவை;␢ மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே;⁾ 7⁽கடவுளே, உமது பேரன்பு␢ எத்துணை அருமையானது!␢ மானிடர் உம் இறக்கைகளின் நிழலில்␢ புகலிடம் பெறுகின்றனர்.⁾ 8⁽உமது இல்லத்தின் செழுமையால்␢ அவர்கள் நிறைவு பெறுகின்றனர்;␢ உமது பேரின்ப நீரோடையில்␢ அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர்.⁾ 9⁽ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று␢ உம்மிடமே உள்ளது; § உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.⁾ 10⁽உம்மை அறிந்தோர்க்கு␢ உமது பேரன்பையும்,␢ நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும்␢ தொடர்ந்து வழங்கியருளும்!⁾ 11⁽செருக்குற்றோரின் கால்␢ என்னை நசுக்க விடாதேயும்!␢ பொல்லாரின் கை␢ என்னைப் பிடிக்க விடாதேயும்!⁾ 12⁽தீங்கிழைப்போர் அதோ அங்கே␢ குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர்,␢ அவர்கள் நசுக்கப்பட்டனர்;␢ அவர்களால் எழவே இயலாது.⁾