திருப்பாடல்கள் 19

முந்திய அடுத்த
1⁽வானங்கள் இறைவனின்␢ மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;␢ வான்வெளி அவர்தம் கைகளின்␢ வேலைப்பாட்டை விவரிக்கின்றது.⁾ 2⁽ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு␢ அச்செய்தியை அறிவிக்கின்றது;␢ ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு␢ அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.⁾ 3⁽அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;␢ அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.⁾ 4⁽ஆயினும், அவற்றின் அறிக்கை␢ உலகெங்கும் சென்றடைகின்றது; § அவை கூறும் செய்தி␢ உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,␢ இறைவன் அங்கே கதிரவனுக்கு␢ ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.⁾ 5⁽மணவறையிலிருந்து புறப்படும்␢ மணமகளைப் போல அது வருகின்றது;␢ பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு␢ அது தன் பாதையில் ஓடுகின்றது.⁾ 6⁽அது வானத்தின் ஒரு முனையிலிருந்து␢ புறப்படுகின்றது; அதன் பாதை␢ மறுமுனைவரையிலும் செல்கின்றது;␢ அதன் வெப்பத்திற்கு␢ மறைவானது ஒன்றுமில்லை.⁾ 7⁽ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;␢ அது புத்துயிர் அளிக்கின்றது.␢ ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;␢ எளியவருக்கு அது § ஞானம் அளிக்கின்றது.⁾ 8⁽ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;␢ அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.␢ ஆண்டவரின் கட்டளைகள்␢ ஒளிமயமானவை;␢ அவை கண்களை ஒளிர்விக்கின்றன.⁾ 9⁽ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;␢ அது எந்நாளும் நிலைத்திருக்கும்.␢ ஆண்டவரின் நீதிநெறிகள்␢ உண்மையானவை; § அவை முற்றிலும் நீதியானவை.⁾ 10⁽அவை பொன்னினும்,␢ பசும் பொன்னினும் மேலாக␢ விலைமிக்கவை; தேனினும்,␢ தேனடையினின்று சிந்தும்␢ தெளி தேனினும் இனிமையானவை.⁾ 11⁽அவற்றால் அடியேன்␢ எச்சரிக்கப்படுகின்றேன்;␢ அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு␢ மிகுந்த பரிசுண்டு.⁾ 12⁽தம் தவறுகளை␢ உணர்ந்து கொள்பவர் யார்தாம்?␢ என் அறியாப் பிழைக்காக␢ என்னை மன்னியும்.⁾ 13⁽மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து␢ உம் அடியானைக் காத்தருளும்.␢ அவர்கள் என்னை␢ ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்;␢ அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்;␢ பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.⁾ 14⁽என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே!␢ என் வாயின் சொற்கள்␢ உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;␢ என் உள்ளத்தின் எண்ணங்கள்␢ உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.⁾