1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்!␢ யோசேப்பை மந்தையென நடத்திச்␢ செல்கின்றவரே! § கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே,␢ ஒளிர்ந்திடும்!⁾
2⁽எப்ராயிம், பென்யமின்,␢ மனாசேயின் முன்னிலையில்␢ உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து␢ எம்மை மீட்க வாரும்!⁾
3⁽கடவுளே, எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾
4⁽படைகளின் கடவுளாம் ஆண்டவரே!␢ உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக␢ எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?⁾
5⁽கண்ணீராம் உணவை␢ அவர்கள் உண்ணச் செய்தீர்;␢ கண்ணீரை அவர்கள்␢ பெருமளவு பருகச் செய்தீர்.⁾
6⁽எங்கள் அண்டை நாட்டாருக்கு␢ எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்;␢ எங்கள் எதிரிகள்␢ எம்மை ஏளனம் செய்தார்கள்.⁾
7⁽படைகளின் கடவுளே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்.⁾
8⁽எகிப்தினின்று திராட்சைக்செடி␢ ஒன்றைக் கொண்டுவந்தீர்;␢ வேற்றினத்தாரை விரட்டிவிட்டு␢ அதனை நட்டு வைத்தீர்.⁾
9⁽அதற்கென நிலத்தை␢ ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்;␢ அது ஆழ வேரூன்றி␢ நாட்டை நிரப்பியது.⁾
10⁽அதன் நிழல் மலைகளையும்␢ அதன் கிளைகள்␢ வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.⁾
11⁽அதன் கொடிகள் கடல்வரையும்*␢ அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின.⁾
12⁽பின்னர், நீர் ஏன்␢ அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?␢ அவ்வழிச் செல்வோர் அனைவரும்␢ அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!⁾
13⁽காட்டுப் பன்றிகள்␢ அதனை அழிக்கின்றன;␢ வயல்வெளி உயிரினங்கள்␢ அதனை மேய்கின்றன.⁾
14⁽படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்!␢ விண்ணுலகினின்று␢ கண்ணோக்கிப் பாரும்;␢ இந்த திராட்சைக் கொடிமீது § பரிவு காட்டும்!⁾
15⁽உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,␢ உமக்கென நீர் வளர்த்த மகவைக்␢ காத்தருளும்!⁾
16⁽அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;␢ அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;␢ உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,␢ அவர்கள் அழிந்துபோவார்களாக!⁾
17⁽உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை␢ உமது கை காப்பதாக!␢ உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த␢ மானிட மைந்தரைக் காப்பதாக!⁾
18⁽இனி நாங்கள் உம்மைவிட்டு␢ அகலமாட்டோம்;␢ எமக்கு வாழ்வு அளித்தருளும்;␢ நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.⁾
19⁽படைகளின் கடவுளான ஆண்டவரே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ நாங்கள் விடுதலை பெறுமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾