திருப்பாடல்கள் 66

முந்திய அடுத்த
1⁽அனைத்துலகோரே!␢ கடவுளைப் போற்றி␢ ஆர்ப்பரியுங்கள்!⁾ 2⁽அவரது பெயரின் மாட்சியைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.⁾ 3⁽கடவுளை நோக்கி␢ ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;␢ உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக␢ உம் எதிரிகள் உமது முன்னலையில்␢ கூனிக் குறுகுவர்;⁾ 4⁽அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;␢ அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;␢ உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’␢ என்று சொல்லுங்கள். (சேலா)⁾ 5⁽வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!␢ அவர் மானிடரிடையே ஆற்றிவரும்␢ செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.⁾ 6⁽கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;␢ ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.␢ அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.⁾ 7⁽அவர் தமது வலிமையால்␢ என்றென்றும் அரசாள்கிறார்!␢ அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக்␢ கவனித்து வருகின்றன;␢ கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த்␢ தலைதூக்காதிருப்பராக! (சேலா)⁾ 8⁽மக்களினங்களே!␢ நம் கடவுளைப் போற்றுங்கள்;␢ அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி␢ கேட்கச் செய்யுங்கள்.⁾ 9⁽நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;␢ அவர் நம் கால்களை இடற விடவில்லை.⁾ 10⁽கடவுளே! எங்களை ஆய்ந்து,␢ வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;⁾ 11⁽கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்;␢ பளுவான சுமைகளை␢ எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.⁾ 12⁽மனிதரை எங்கள் தலைகள்மீது␢ நடந்துபோகச் செய்தீர்;␢ நெருப்பிலும் தண்ணீரிலும்␢ அகப்பட்டிருந்தோம்; ஆயினும்,␢ நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக்␢ கொண்டுவந்து சேர்த்தீர்.⁾ 13⁽எரிபலியுடன்␢ உமது இல்லத்தினுள் செல்வேன்;␢ என் பொருத்தனைகளை␢ உமக்குச் செலுத்துவேன்.⁾ 14⁽அவற்றை என் துன்ப வேளையில்␢ என் நா உரைத்தது;␢ என் வாய் உறுதி செய்தது.⁾ 15⁽கொழுத்த கன்றுகளை,␢ செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு,␢ உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்;␢ காளைகளையும்␢ வெள்ளாட்டுக் கிடாய்களையும்␢ உமக்குப் பலியிடுவேன். (சேலா)⁾ 16⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போரே!␢ அனைவரும் வாரீர்! கேளீர்!␢ அவர் எனக்குச் செய்ததனை␢ எடுத்துரைப்பேன்.⁾ 17⁽அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது;␢ அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.⁾ 18⁽என் உள்ளத்தில் தீய எண்ணங்களை␢ வளர்த்திருந்தேனாகில்,␢ என் தலைவர் எனக்குச்␢ செவிசாய்த்திருக்கமாட்டார்.⁾ 19⁽ஆனால், உண்மையில்␢ கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்;␢ என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.⁾ 20⁽என் மன்றாட்டைப் புறக்கணியாத␢ கடவுள் போற்றி!␢ தம் பேரன்பை என்னிடமிருந்து␢ நீக்காத இறைவன் போற்றி!⁾