1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽அனைத்துலகோரே!␢ கடவுளைப் போற்றி␢ ஆர்ப்பரியுங்கள்!⁾
2⁽அவரது பெயரின் மாட்சியைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.⁾
3⁽கடவுளை நோக்கி␢ ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;␢ உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக␢ உம் எதிரிகள் உமது முன்னலையில்␢ கூனிக் குறுகுவர்;⁾
4⁽அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;␢ அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;␢ உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’␢ என்று சொல்லுங்கள். (சேலா)⁾
5⁽வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!␢ அவர் மானிடரிடையே ஆற்றிவரும்␢ செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.⁾
6⁽கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;␢ ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.␢ அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.⁾
7⁽அவர் தமது வலிமையால்␢ என்றென்றும் அரசாள்கிறார்!␢ அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக்␢ கவனித்து வருகின்றன;␢ கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த்␢ தலைதூக்காதிருப்பராக! (சேலா)⁾
8⁽மக்களினங்களே!␢ நம் கடவுளைப் போற்றுங்கள்;␢ அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி␢ கேட்கச் செய்யுங்கள்.⁾
9⁽நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;␢ அவர் நம் கால்களை இடற விடவில்லை.⁾
10⁽கடவுளே! எங்களை ஆய்ந்து,␢ வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;⁾
11⁽கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்;␢ பளுவான சுமைகளை␢ எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.⁾
12⁽மனிதரை எங்கள் தலைகள்மீது␢ நடந்துபோகச் செய்தீர்;␢ நெருப்பிலும் தண்ணீரிலும்␢ அகப்பட்டிருந்தோம்; ஆயினும்,␢ நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக்␢ கொண்டுவந்து சேர்த்தீர்.⁾
13⁽எரிபலியுடன்␢ உமது இல்லத்தினுள் செல்வேன்;␢ என் பொருத்தனைகளை␢ உமக்குச் செலுத்துவேன்.⁾
14⁽அவற்றை என் துன்ப வேளையில்␢ என் நா உரைத்தது;␢ என் வாய் உறுதி செய்தது.⁾
15⁽கொழுத்த கன்றுகளை,␢ செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு,␢ உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்;␢ காளைகளையும்␢ வெள்ளாட்டுக் கிடாய்களையும்␢ உமக்குப் பலியிடுவேன். (சேலா)⁾
16⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போரே!␢ அனைவரும் வாரீர்! கேளீர்!␢ அவர் எனக்குச் செய்ததனை␢ எடுத்துரைப்பேன்.⁾
17⁽அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது;␢ அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.⁾
18⁽என் உள்ளத்தில் தீய எண்ணங்களை␢ வளர்த்திருந்தேனாகில்,␢ என் தலைவர் எனக்குச்␢ செவிசாய்த்திருக்கமாட்டார்.⁾
19⁽ஆனால், உண்மையில்␢ கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்;␢ என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.⁾
20⁽என் மன்றாட்டைப் புறக்கணியாத␢ கடவுள் போற்றி!␢ தம் பேரன்பை என்னிடமிருந்து␢ நீக்காத இறைவன் போற்றி!⁾