திருப்பாடல்கள் 139

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே!␢ நீர் என்னை␢ ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!⁾ 2⁽நான் அமர்வதையும் எழுவதையும்␢ நீர் அறிந்திருக்கின்றீர்;␢ என் நினைவுகளை எல்லாம்␢ தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.⁾ 3⁽நான் நடப்பதையும் படுப்பதையும்␢ நீர் அறிந்துள்ளீர்;␢ என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவையே.⁾ 4⁽ஆண்டவரே! என் வாயில்␢ சொல் உருவாகு முன்பே,␢ அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.⁾ 5⁽எனக்கு முன்னும் பின்னும்␢ என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்;␢ உமது கையால் என்னைப்␢ பற்றிப்பிடிக்கின்றீர்.⁾ 6⁽என்னைப்பற்றிய உம் அறிவு␢ எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது;␢ அது உன்னதமானது;␢ என் அறிவுக்கு எட்டாதது.⁾ 7⁽உமது ஆற்றலைவிட்டு␢ நான் எங்கே செல்லக்கூடும்?␢ உமது திருமுன்னிலிருந்து␢ நான் எங்கே தப்பியோட முடியும்?⁾ 8⁽நான் வானத்திற்கு␢ ஏறிச் சென்றாலும்␢ நீர் அங்கே இருக்கின்றீர்!␢ பாதாளத்தில் படுக்கையை␢ அமைத்துக் கொண்டாலும்␢ நீர் அங்கேயும் இருக்கின்றீர்!⁾ 9⁽நான் *கதிரவனின் இடத்திற்கும்*␢ பறந்து சென்றாலும்␢ மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,⁾ 10⁽அங்கேயும் உமது கை␢ என்னை நடத்திச் செல்லும்;␢ உமது வலக்கை என்னைப்␢ பற்றிக் கொள்ளும்.⁾ 11⁽‘உண்மையில் இருள் என்னை␢ மூடிக்கொள்ளாதோ?␢ ஒளி சூழ்வதென இரவும்␢ என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?’␢ என்று நான் சொன்னாலும்,⁾ 12⁽இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை;␢ இரவும் பகலைப்போல␢ ஒளியாய் இருக்கின்றது;␢ இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.⁾ 13⁽ஏனெனில், என் உள் உறுப்புகளை␢ உண்டாக்கியவர் நீரே!␢ என் தாயின் கருவில்␢ எனக்கு உருதந்தவர் நீரே!⁾ 14⁽அஞ்சத்தகு, வியத்தகு முறையில்␢ நீர் என்னைப் படைத்ததால்,␢ நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;␢ உம் செயல்கள்␢ வியக்கத்தக்கவை என்பதை␢ என் மனம் முற்றிலும் அறியும்.⁾ 15⁽என் எலும்பு உமக்கு மறைவானதன்று;␢ மறைவான முறையில்␢ நான் உருவானதையும்␢ பூவுலகின் ஆழ்பகுதிகளில்␢ நான் உருப்பெற்றதையும்␢ நீர் அறிந்திருந்தீர்.⁾ 16⁽உம் கண்கள் கருமுளையில்␢ என் உறுப்புகளைக் கண்டன;␢ நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள␢ நாள்கள் எல்லாம்␢ எனக்கு வாழ்நாள் எதுவுமே␢ இல்லாத காலத்திலேயே␢ உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.⁾ 17⁽இறைவா! உம்முடைய நினைவுகளை␢ நான் அறிந்துகொள்வது␢ எத்துணைக் கடினம்!␢ அவற்றின் எண்ணிக்கை␢ எத்துணைப் பெரிது!⁾ 18⁽அவற்றைக் கணக்கிட␢ நான் முற்பட்டால்,␢ அவை கடல் மணலிலும்␢ மிகுதியாய் உள்ளன;␢ அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால்,␢ நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.⁾ 19⁽கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால்,␢ எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர்␢ என்னிடமிருந்து அகன்றால்,␢ எத்துணை நன்று!⁾ 20⁽ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன்␢ உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்;␢ அவர்கள் தலைதூக்கி␢ உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள்.⁾ 21⁽ஆண்டவரே! உம்மை வெறுப்போரை␢ நானும் வெறுக்காதிருப்பேனோ?␢ உம்மை எதிர்க்க எழுவோரை␢ நானும் வெறுக்கின்றேன் அன்றோ?⁾ 22⁽நான் அவர்களை␢ அடியோடு வெறுக்கின்றேன்;␢ அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள்.⁾ 23⁽இறைவா! நீர் என் உள்ளத்தை␢ ஆய்ந்து அறியும்;␢ என் எண்ணங்களை அறியுமாறு␢ என்னைச் சோதித்துப் பாரும்.⁾ 24⁽உம்மை வருத்தும் வழியில்␢ நான் செல்கின்றேனோ என்று பாரும்;␢ என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.⁾